tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

கொலை மிரட்டல் நடிகை நிலானி புகார்
சென்னை, ஜூன் 20 - கொலைமிரட்டல் விடுக்கும் நபர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வியாழனன்று (ஜூன் 20) சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை நிலானி புகார் அளித்தார். அந்தப்புகாரில், “தன்னை மஞ்சுநாதன் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துவதாகவும், அதற்கு தாம் மறுப்பதால் செல்போன் மூலம் தொல்லை தருவதோடு, ஆபாச படம் வெளியிடப் போவதாகவும், ஆசிட் வீசி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டுகிறார். எனவே, மஞ்சுநாதன் மீது நடவடிக்கை எடுப்பதோடு, தமக்கும், தனது பிள்ளை களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வின் போது அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க சட்ட உதவி மையச் செயலாளர் எஸ்.மனோன்மணி, தென்சென்னை மாவட்டச் செயலாளர் வி.தனலட்சுமி, பொருளாளர் ம.சித்ரகலா ஆகியோர் உடனிருந்தனர்.

சென்னையை குளிர்வித்த மழை
சென்னை, ஜூன் 20-  சென்னையில் கோடை முடிந்த நிலையிலும் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலை யில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழனன்று (ஜூன் 20) மதியம் முதல் மிதமான மழை பெய்தது. இந்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தரமணி, சோழிங்கநல்லூர், ஆலந்தூர், கிண்டி, சைதாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. பல்வேறு பகுதிகளில் மழை பெய்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. சென்னையின் பல இடங்களில் ஆறு மாதங்களுக்கு பிறகு பரவலாக மழை பெய்தது.

காலமானார்
சென்னை, ஜூன் 20 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென் சென்னை மாவட்டக் குழு உறுப்பினர் எம். சரஸ்வதியின் மாமியாரும், ஆழ்வார்பேட்டை கிளை உறுப்பினர் என். நித்தியானந்த த்தின் தாயாருமான என். பூரணியம்மாள் புதனன்று (ஜூன் 20) காலமானார். அவருக்கு வயது 90. தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் சாலை ஜெகநாதன் தோட்டத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.குமார், மயிலை பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி, கிளைச் செயலாளர் ரவி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். அன்னாரது உடல் வியாழனன்று (ஜூன் 20) கன்னம்மாபேட்டை மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.