வாலாஜாபாத்,டிச.20- வாலாஜாபாத் பேரூராட்சியில் வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்ட காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா. பொன்னையா போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டதன் பெயரில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெறுகிறது. ரயில்வே மேம்பாலம் முதல் வாலாஜாபாத் சந்திப்பு வரை சாலையை அகலப்படுத்தும் பணி நடைபெறுகிறது. குவாரிகள் மிகுந்த வாலாஜாபாத் சுற்றியுள்ள பகுதிகளில் கனரக வாகனங்கள் எப்போதும் சென்ற வண்ணம் உள்ளது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசலும் விபத்துகளும் ஏற்படுகிறது . அதனை கட்டுப்படுத்தும் விதமாக காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 5.30 மணி வரையிலும் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.அந்நேரங்களில் இயக்கப்படும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.