பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், ரூ.88.93 கோடியில் நலத்திட்ட உதவிகள்
கோவை, ஜூன் 17- கடந்த நான்கு ஆண்டுகளில் மாவட்ட பிற் படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில், 46,494 பயனாளிகளுக்கு ரூ.88.93 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக கோவை ஆட்சியர் பவன் குமார் க.கிரியப்பனவர் வெளியிட்டுள்ள செய் திக்குறிப்பில், பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையின வகுப்புகளைச் சேர்ந்தவர் கள், கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் தொழில் போன்ற நிலைகளில் தங்களது நிலையினை உயர்த்திக்கொள்வதற்காக பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின் றன. அதன்படி, கோவை மாவட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் நலத்துறையின் சார்பில், 29,338 மாணாக்கர்களுக்கு, ரூ.11.73 கோடி மதிப்பில் கல்வி உதவித்தொகை, 353 நபர்களுக்கு ரூ.21.78 லட்சம் மதிப்பில் விலையில்லா சல வைப் பெட்டிகள், 423 நபர்களுக்கு ரூ.20.95 லட்சம் மதிப்பில் விலையில்லா தையல் இயந் திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், கிராமப்புற பெண்கல்வி ஊக்கத்தொகை வழங் கும் திட்டத்தின் கீழ் 12,586 மாணவிகளுக்கு ரூ.79.57 லட்சம் ஊக்கத்தொகை, டாப் செட்கோ கடன் உதவித்திட்டத்தின் கீழ் 1,214 பயனாளிகளுக்கு ரூ.6.09 கோடி கடன் உதவி கள், மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.23.89 கோடி மதிப்பீட்டில் விலையில்லா மிதிவண்டிகள், இலவச வீட்டுமனை பட்டா 2300 நபர்களுக்கு ரூ.46 கோடியில் வீட்டுமனைப் பட்டாக்கள் என மொத்தம் 46494 பயனாளிகளுக்கு ரூ.88.93 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.