tamilnadu

img

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

மீன் பிடிக்க ஏரியில் செலுத்திய  மின்சாரம் தாக்கி 2 பேர் படுகாயம்

தருமபுரி, மார்ச் 7- மகேந்திரமங்கலம் அருகே மீன் பிடிக்க ஏரியில் மின்சாரம் பாய்ச்சியதில் 2 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், பனமுட்லு, ஏரியூர் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பன் (58) என்பவர் ஆடுகளை மேய்த்து வருகி றார். வியாழனஅன்று ஆடுகளை மேய்ச்சலுக்காக தரும புரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அடுத்த மோரன அள்ளி புதூர் கொல்லை ஏரிக்கு அழைத்து சென்றார். மாலை  6 மணிக்கு வீட்டிற்கு ஆடுகளை அழைத்து சென்றபோது, 2 ஆடுகள் மாயமாகியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து மாரியப்பனின் உறவினர்களான ராஜேந்திரன் (33), ராஜ மாணிக்கம் (27) ஆகிய இருவரும் ஆடுகளை தேடி ஏரிக்கு சென்றனர். ஏரியிலுள்ள தண்ணீரில் ராஜேந்திரன் கால் வைத்த போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. அவரை காப் பாற்ற முயன்ற ராஜமாணிக்கத்தையும் மின்சாரம் தாக்கி யுள்ளது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம டைந்து, இரவு முழுவதும் மயங்கிய நிலையில் கிடந்தனர். இதைத்தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை மாரியப்ப னின் உறவினர்களான ரமேஷ், வேடியப்பன் ஆகிய இருவ ரும் ஏரிக்கு சென்றபோது, மயங்கிய நிலையில் இருந்த இரு வரையும் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மின்சாரம் பாய்ந்ததில் இருவருக்கும் கால்தொடை முதல் பாதம் வரை ரத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இதுகுறித்து தகவலறிந்த மகேந்திரமங்கலம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரனை நடத்தி னர். விசாரணையில், மீன்பிடிப்பதற்காக அடையாளம் தெரி யாத நபர்கள் ஏரியில் மின்சாரம் பாய்ச்சியதும், இதனை அறி யாமல் இருவரும் தண்ணீரில் கால் வைத்து படுகாயமடைந்த தும் தெரிய வந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சட்ட விரோதமாக ஏரியில் மின்சாரம் பாய்ச்சிய  நபர்களை தேடி வருகின்றனர்.

அரசுப்பள்ளியில் ஆண்டு விழா!

ப்படை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் நடை பெற்ற ஆண்டு விழாவில், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை பலர் கண்டு ரசித்தனர். நாமக்கல் மாவட்டம், வெப்படை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவி கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் ஆண்டு விழா வெள்ளியன்று பள்ளி வளாகத்தில் தலைமையசிரியர் (பொ)  பூங்கொடி தலைமையில் கொண்டாடப்பட்டது. ஆண்டு விழாவை ஒட்டி, பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள்  நடத்தப்பட்டன. பள்ளி குழந்தைகள் கிராமியப் பாடலுக்கு தலையில் கரகத்தை வைத்துக்கொண்டு நடனமாடியது அங் குள்ள பார்வையார்களை வெகுவாக கவர்ந்தது. கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அப்பகுதியைச் சேர்ந்த  ஏராளமான பொதுமக்கள், குழந்தைகளின் நடனத்தை கண்டு ரசித்தனர்.

பறவைகள் தாகம் தணிக்க மண் சட்டிகள்

கோவை, மார்ச் 7– கோடை காலம் துவங்குவதை முன்னிட்டு பறவைகளின் தாகம் தணிப்பதற்காக கோவை மாவட்ட வனத்துறை அலு வலகத்தில் தன்னார்வ அமைப்புகள் மூலம் பள்ளி மாண வர்களுக்கு பறவைகளுக்கான நீர் சட்டிகள் வழங்கப்பட் டது. இந்த நிகழ்வில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கண பதி ராஜ்குமார், ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்கு னர் வெங்கடேஷ், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், சலீம்  அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தின் மூத்த விஞ்ஞானி பிர மோத் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு அந்த  நீர் சட்டிகளை வழங்கினர்.  தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கணபதி ப.ராஜ்குமார் கூறியதாவது: “வெயில் காலத் தில் பறவைகளுக்குத் தேவையான ஒன்று நீர். கோவை மாநகர் முழுவதும் பறவைகளுக்கு நீர் கிடைக்கும் வண்ணம் இந்த நிகழ்ச்சி துவங்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக பள்ளி மாண வர்களிடம் பறவைகளுக்காக நீர் சட்டிகள் வழங்கப்பட்டுள் ளது. கோவையில் வனவிலங்கு மனித மோதலை தடுப்பதற்கு வனத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின்றனர். மனித-வனவிலங்குகள் மோதலை தடுப்பதற்கு வரும் காலத்தில் பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்படும்.” தொடர்ந்து பேசிய ஆனைமலை புலிகள் காப்பக கள  இயக்குனர் வெங்கடேஷ் கூறும் போது: “இந்த முறை ஆனை மலை புலிகள் காப்பகத்தில் விலங்குகளுக்கு வைக்கப்பட்ட நீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்புவதற்காகவே புதிய டிராக் டர்கள் வாங்கப்பட்டுள்ளது. மேலும் காடுகளுக்குள் ஏற்படும் தீ குறித்து செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் நமக்கு உடனடியாக எச்சரிக்கை குறுஞ்செய்தி அனுப்பப்படுகிறது. குறுஞ்செய்தி வந்தவுடன் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். மேலும் காட்டுத் தீ ஏற்படாமல் இருக்கவும் முடிந்தவரை அதனை தடுப்பதற்கும் நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

136 கடைகளுக்கு சீல் சேலம்,

மார்ச் 7- சேலம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றதாக 136 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, ரூ.42.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாநகரத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, புகை யிலைப் பொருட்களை விற்பனை செய்யும் கடைக்காரர்களை  போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். கடைகளில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வது தெரியவந்தால் அவற்றை பறிமுதல் செய்வதுடன், கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. மாவட் டத்தில் கடந்த 2 மாதத்தில் 2,352 கடைகளில் சோதனை நடத் தப்பட்டது. இதில் 136 கடைகளில் தடை செய்யப்பட்ட புகை யிலைப் பொருட்கள், போதைப்பாக்குகள் விற்பனை செய் தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அக்கடைகளிலிருந்து ரூ.2.30 லட்சம் மதிப்பிலான 251 கிலோ புகையிலைப் பொருட் களை பறிமுதல் செய்த அதிகாரிகள், 136 கடைகளுக்கு சீல்  வைத்ததுடன், அக்கடை உரிமையாளர்களுக்கு ரூ.42.50 லட் சம் அபராதம் விதித்துள்ளனர்.