திருப்பூர்: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.84 சதவீத மாணவ, மாணவிகள் தேர்ச்சி
திருப்பூர், மே 16 – திருப்பூர் மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 94.84 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும், உடுமலை மாணவி மாநில அளவில் முதலிடமும், திருப்பூர் மாநகராட்சி பள்ளி மாணவர் மூன்றாம் இடம் பிடித் துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 28 ஆம் தேதி முதல் ஏப் ரல் 14 ஆம் தேதி வரை நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் 108 தேர்வு மையங்களில் இந்த தேர்வு நடை பெற்றது. இதில் 29,459 பேர் தேர்வு எழுதி இருந்தனர். இம்மாணவர்க ளுக்கான தேர்வு முடிவுகள் வெள்ளி யன்று வெளியானது. இதில், திருப் பூர் மாவட்டத்தில் 348 பள்ளிகளில் 162 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி அடைந் துள்ளன. இதில் தேர்வு எழுதிய 14,588 மாணவர்களில் 13,622 மாணவர்க ளும், 14,871 மாணவிகளின் 14,317 மாணவிகளும் என 27,939 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதன் மூலம் 94.84 தேர்ச்சி சதவிகிதத்துடன் திருப்பூர் மாவட்டம் மாநில அளவில் 17 ஆவது இடத்தை பிடித்துள்ளது.
பள்ளிகளின் தேர்ச்சி விகிதம்:
அரசுப்பள்ளிகள் தேர்ச்சி சதவீ தத்தில் 163 பள்ளிகளைச் சேர்ந்த 15,301 மாணவ மாணவிகள் தேர்வு எழுதி இருந்தனர். இதில், மாணவர் கள் 7403 பேரில் 6602 மாணவர்களும், மாணவிகள் 7,898 பேரில் 7404 மாண விகள் என 14,006 பேர் தேர்ச்சி பெற் றுள்ளனர். இதன் மூலம் 91.54 சதவீத தேர்ச்சி விகிதத்துடன் அரசு பள்ளி கள் தேர்ச்சி விகிதத்தில் திருப்பூர் மாவட்டம் 25 ஆவது இடம் பிடித்துள் ளது. 35 அரசு பள்ளிகள், 1 ஆதிதிரா விடர் நலத்துறை பள்ளி, 5 அரசு உதவி பெறும் பள்ளிகள், 118 தனியார் பள்ளி கள் 100% தேர்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டு மாநில அளவில் 21 ஆவது இடம் பெற்ற நிலையில், 4 இடங்கள் முன்னேறி 17 ஆவது இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 92.38 சதவிகித தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு 94.84 சதவிகிதம் என தேர்ச்சி சதவிகிதம் உயர்ந்துள்ளது. மாணவர்களை விட மாணவிகளை இந்த ஆண்டும் அதிக அளவு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மாநிலத்தில் முதலிடம்:
உடுமலை தனியார் பள்ளி மாணவி திவ்யலட்சுமி 499 மதிப் பெண் பெற்று மாநிலத்தில் முதலி டம் பெற்றுள்ளார். இவர் தமிழில் 99, ஆங்கிலம் 100, கணிதம் 100, அறிவி யல் 100, சமூக அறிவியல் 100 என மொத்தம் 499 மதிப்பெண் பெற்றுள் ளார். முதலிடம் பெற்ற மாணவிக்கு பள்ளி முதல்வர் ஜாஸ்மின் ஜேக்கப், பள்ளி ஆசிரியர்கள் வாழ்த்து தெரி வித்தனர்.
அரசு பள்ளி மாணவர் சாதனை:
திருப்பூர் நெசவாளர் காலனி மாந கராட்சி பள்ளி மாணவன் வீரமணி கண்டன் 497 மதிப்பெண் பெற்று பத் தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் மூன்றாவது இடம் பிடித்துள் ளார். இவர் அறிவியல், சமூக அறிவி யல் பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்ணும், தமிழ் ஆங்கிலம் கணிதம் ஆகியவற்றில் தலா 99 மதிப் பெண்கள் பெற்றுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதியவர்க ளில் ஆங்கில மொழிப்பாடத்தில் 40 பேரும், கணிதத்தில் 89 பேரும், அறி வியலில் 410 பேர், சமூக அறிவிய லில் 455 பேர் நூற்றுக்கு நூறு மதிப் பெண் பெற்றுள்ளனர்.