tamilnadu

img

மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் போராட்டம் வெற்றி!

மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் போராட்டம் வெற்றி!

சேலம், ஜூன் 15- மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் தொடர் போராட்டம் காரணமாக ஓம லூரில் 38 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. சேலம் மாவட்டம், ஓமலூர் தாலு காவில் வீடுகள் இல்லாத மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டு  மனை கேட்டு விண்ணப்பித்துள்ள னர். ஆண்டுகள் பல கடந்தும் இலவச  வீட்டு மனைப்பட்டா வழங்கவில்லை.  இதையடுத்து, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங் கத்தினர் தொடர் போராட்டங்களை  நடத்தி வந்தனர். இதனையடுத்து இப் போராட்டத்தில் பங்கேற்ற மாற்றுத்திற னாளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், அடக்குமுறைக்கு அஞ்சாமல் தொடர் போராட்டத்தை மேற்கொண்டனர். இந்நிலையில், ஓமலூர் வட்டாட்சி யர் அலுவலகத்தில் மாற்று திறனாளி கள் 38 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது. ஒருவர் விபத் தில் மரணம் அடைந்ததால் அவரது குடும்பத்தினருக்கு வழங்குவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அனை வருக்கும் பட்டா வழங்கப்பட்டது. இதில் வட்டாட்சியர், விஏஓ உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு பட்டாவை வழங்கினர். இந்நிகழ்வில்  சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம். குணசேகரன், மாவட்டத் தலைவர் பி. ஹரி கிருஷ்ணன், மாவட்ட இணைச் செயலாளர் அமலா ராணி, ஓமலூர் நிர்வாகிகள் சிவா கோபிநாத் சாவித் திரி உள்ளிட்ட பலர் கலந்து கொண் டனர்.