கல்வி அலுவலரைக் கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கோவை மாவட்டத்தில் 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்கு வந்த ஆசிரியர்களை பணி செய்யக் கூடாது என மாவட்ட கல்வி அலுவலர் பணி செய்ய அனுமதிக்கமல் திரும்பி அனுப்பியதை கண்டித்து தமிழ்நாடு முதுநிலை பட்ட தாரி ஆசிரியர் கழகத்தினர் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் பீளமேடு சர் வஜனப் பள்ளிகளில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு விடைத் தாள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பீளமேடு மையத்தில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்பணிகள் 20 நாட்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில், இப்பணிக்காக மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் விண்ணப்பித்து விடைத்தாள் திருத் தும் பணிக்கு வந்த பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தைச் சேர்ந்த 5 ஆசிரியர்களை, கல்வி அலுவலர் பணி செய்யக்கூடாது எனக் கூறி விடைத்தாள்களை திரும்பப் பெற்றுக்கொண்டு வெளியே அனுப்பியுள்ளார். இதனைக் கண்டித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசி ரியர் கழகத்தினர் விடைத்தாள் திருத்தும் பணியை புறக் கணித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேட்ஜ் அணிந்து விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், “பள்ளிக் கல்வித்துறை உத்தரவின் அடிப்படையிலேயே ஆசிரியர்கள் விருப்பக் கடிதத்தை முதன்மை கல்வி அலுவலரிடம் வழங் கினோம். இந்நிலையில் வெள்ளியன்று பீளமேடு சர்வ ஜனப் பள்ளிக்கு விடைத்தாள் திருத்தும் பணிக்கு வந்த ஆசிரியர்களை பணி செய்யக் கூடாது என அனுப்பிவிட்ட னர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் எந்த ஆசிரியர்களுக்கும் கோவையில் பணி வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளனர். விடைத்தாள் முகாம் அலுவல ரும், கோவை மாவட்ட கல்வி அலுவலருமான கோமதி, பணி ஒதுக்கீடு செய்த ஆசிரியரை பணி செய்ய விடாமல் தடுத் துள்ளார். இது மிகவும் கண்டனத்திற்குரியது. அதிகப் படியான ஆசிரியர்கள் வந்தால், அதிக விடைத்தாள் உள்ள பகுதியில் இருந்து விடைத்தாளை எடுத்து வந்து பணியாற்ற வும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த உத்தரவை யும் பின்பற்றாமல், ஆசிரியர்களை புறக்கணிப்பது வேதனை யளிக்கிறது. இதன் காரணமாக சனியன்று பணியை புறக் கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்,” என்றார்.