tamilnadu

img

சிப்காட் தொழிற்சாலையில் டேங்க் வெடித்து விபத்து

சிப்காட் தொழிற்சாலையில்  டேங்க் வெடித்து விபத்து

விசாரணைக்கு உத்தரவிட கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கடலூர், மே 18- கடலூர் சிப்காட் தொழிற்சாலை யில் டேங்க் வெடித்து விபத்து ஏற்பட்டது தொடர்பாக, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கடலூர் சிப்காட் லாயல் சூப்பர் பேப்ரிக்ஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட கழிவுநீர் டேங்க் வெடித்த தில் 6 லட்சம் லிட்டர்  ரசாயன கொதி நீர் சிதறி அக்கம் பக்கம் உள்ள வீடுகளில் புகுந்தது. சுற்றுப்புற வீடுகளின் சுவர்கள் இடிந்து உள்ளது. 50க்கும் மேற்பட்டவர் கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனை க்கு சென்றுள்ளனர். தற்போது 30க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வரு கின்றனர். சிப்காட் தொழில் வளா கத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வரு கின்றன. ரசாயன தொழிற்சாலைகளில் இயந்திரங்கள், ரேடியேட்டர், பாய்லர் கள் உள்ளிட்டவைகள் முறையாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டிய ஆய்வகத்துறை முறையாக ஆய்வு செய்கிறதா?, ரசாயன பொருட்கள் இருப்பு வைப்ப தற்கு மாவட்ட நிர்வாகத்தில் முன் அனுமதி பெற வேண்டும். அது முறை யாக நடை பெறுகிறதா? என்பதை  ஆய்வு செய்ய வேண்டும். சுற்றுச்சூழல் மாசு குறித்து முறை யான பரிசோதனை நடை பெறவில்லை. இதற்கான நவீன இயந்தி ரங்கள் இல்லாத நிலை உள்ளது. எனவே இது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் முறையான நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மக்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்க வேண்டும். பாதிக் கப்பட்ட வீடுகளை ஆலை நிர்வாகமே கட்டிக் கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும். சிப்காட் தொழிற்சாலைகளின் சிஎஸ்ஆர் நிதியைப் பெற்று  கடலூ ரில் நவீன மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை துவங்க நடவ டிக்கை எடுக்க  வலியுறுத்தி சிபிஎம் சார் பில் கடலூரில்  மாவட்ட செயற்குழு  உறுப்பினர் ஜே.ராஜேஷ் கண்ணன்  தலைமையில் இந்த போராட்டம்  நடை பெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.அமர்நாத், குடியி ருப்போர் சங்க சிறப்பு தலைவர் எம்.மருதவாணன், ஒன்றியச் செயலாளர் ஆர்.பஞ்சாட்சரம், நெல்லிக்குப்பம் பகுதிச் செயலாளர் ஸ்டீபன் ராஜ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எம்.கந்த சாமி, அறிவுக்கரசு, நகரக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே. தேவநாதன், ஏ.பாபு  உள்ளிடோர் கலந்து பேசினர்.