நாய்கள் கடித்ததில் புள்ளிமான் உயிரிழப்பு
கோவை, மே 13- கருமத்தம்பட்டி அருகே எலச்சிபாளை யம் பகுதியில் நாய்கள் கடித்ததில் புள்ளி மான் ஒன்று உயிரிழந்தது. கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அருகே உள்ள கோதபாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மான்கள் உள்ளது. இந்த மான்கள் உணவு மற்றும் தண்ணீர் தேடி அவ்போது சோம னூர், தெக்கலூர், கருமத்தம்பட்டி, எலச்சி பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு இரவு நேரங்களில் வந்து செல்வது வழக்கம். சில சமயங்களில் விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து விடுகிறது. இதனிடையே கோடை காலம் காரண மாக கடந்த சில நாட்களாக மான்கள் கிரா மங்களுக்குள் நுழைவது அதிகரித்து வரு கிறது. இந்நிலையில் செவ்வாயன்று அதி காலையில் எலச்சிபாளையம் பகுதிக்குள் ஒரு புள்ளிமான் நுழைந்தது. அந்த மான் அப் பகுதியில் உள்ள பொன்னுச்சாமி என்பவ ரின் தோட்டத்திற்குள் புகுந்தது. அப்போது அங்கியிருந்த நாய்கள் புள்ளிமானை துரத்தி சென்று கடித்தன. இதில் படுகாயம் அடைந்த புள்ளிமான் உயிரிழந்தது. இது குறித்து தகவலறிந்து வந்த கோவை வனத்துறையினர் புள்ளிமானின் உடலை எடுத்து சென்றனர். உடற்கூராய்விற்கு பின்னர் அந்த மானின் உடல், அடக்கம் செய் யப்பட்டது.