tamilnadu

img

தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் மாநாடு

தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் மாநாடு

சேலத்தில் வரவேற்புக்குழு அமைப்பு

சேலம், ஏப்.21- தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழி யர் கூட்டமைப்பின் பொது மாநாடு சேலத்தில் ஆகஸ்ட் மாதம் நடை பெறவுள்ள நிலையில், அதற்காக வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. தமிழ்நாடு, கேரளா மற்றும்  பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய தென் மண்டல இன்சூ ரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் 36 ஆவது பொது மாநாடு மற்றும் பொதுக்குழு கூட்டம், ஆக.9, 10, 11  ஆகிய தேதிகளில், சேலம் நகரில் மூன்று ரோடு பகுதியிலுள்ள வர லட்சுமி திருமண மண்டபத்தில் நடை பெற உள்ளது. 2 ஆயிரத்திற்கும் மேற் பட்ட இன்சூரன்ஸ் ஊழியர்கள் மேற் கண்ட மூன்று மாநிலங்களில் இருந்து கலந்து கொள்ளவுள்ளனர். ஆக.9 ஆம் தேதி மாபெரும் பேரணியோடு மாநாடு துவங்குகிறது. மாநாட்டில் பல்வேறு கலைஞர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். அகில இந்திய மற்றும் மாநில அள விலான தொழிற்சங்க மற்றும் அரசி யல் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிலையில், மாநாட்டை சிறப் பாக நடத்திட அனைத்து ஏற்பாடு களையும் செய்வதற்காக வரவேற் புக்குழு அமைப்பு கூட்டம், சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே  உள்ள ஸ்ரீசாந்த் ஹோட்டலில் திங்க ளன்று நடைபெற்றது. வரவேற்புக் குழு தலைவராக சேலம் நாடாளு மன்ற உறுப்பினர் டி.எம்.செல்வகண பதி, செயலாளராக ஆனந்த், பொரு ளாளராக ஞானவேல் மற்றும்  200க்கும் மேற்பட்ட வரவேற்புக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட் டனர். இந்த வரவேற்புக்குழுவில் அனைத்து தொழிற்சங்கத்தினர் மற் றும் வெகுஜன இயக்கங்கள் இடம் பெற்றுள்ளன. ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில், பொதுத்துறை எல்ஐசியை பலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் நடைபெறும். சேலம் கோட் டத்தின் கீழ் சேலம், நாமக்கல், தரும புரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய  மாவட்டங்களில் மாநாட்டை முன் னிட்டு விரிவான பிரச்சாரம் நடைபெற உள்ளதாக வரவேற்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.