tamilnadu

img

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஊதியம் வழங்கக்கோரி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஊதியம் வழங்கக்கோரி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஏப்.22- ஊராட்சிகளில் பணி செய்து வரும் ஓஎச்டி  ஆப்பரேட்டர், தூய்மைப் பணியாளர்கள்  ஆகியோருக்கு உயர்நீதிமன்ற உத்தர வுப்படி ஊதியம் வழங்கக்கோரி செவ்வா யன்று சிஐடியு திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தி னர் 400க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.  சிஐடியு திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி  உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்டத்  தலைவர் பி.பழனிசாமி தலைமையில் செவ் வாயன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழ்நாட்டில் 12524 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் பல ஆயிரக்கணக்கான ஓஎச்டி ஆப்ரேட்டர்கள், தூய்மைப் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். திருப்பூர்  மாவட்டத்தில் 265 ஊராட்சிகளில் ஆயி ரத்திற்கும் மேற்கண்ட ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். கிராமப் புற மக்களின் அடிப்படைத் தேவைகளான சுகாதாரம் மற்றும் குடிநீர் தேவைகளை இந்த  ஊழியர்கள் அர்ப்பணிப்போடு நிறைவேற்றி  வருகிறார்கள். ஆனால் இவர்களுக்கு தொகுப்பூதியம் என்கிற பெயரில் மாதம்  ரூபாய் 4000 த்தில் இருந்து 6000 ரூபாய்  வரை மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. இன்றைய விலைவாசியில் இந்த ஊதியங் களை பெற்றுக் கொண்டு மிகுந்த துயரத்து டன் கிராம ஊராட்சி ஊழியர்கள் வாழ்ந்து வரு கிறார்கள். எனவே ஊழியர்களை கால முறை ஊழியர் ஆக்கிட வேண்டும் என சிஐ டியு சார்பில் தொடர்ந்து போராட்டம் நடத்தி  வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதோடு, சிஐ டியு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியச் சட்டம் அரசாணை  (2டி)எண் 62 படி ஊதியம் நிர்ணயம் செய்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதன்படி பணியாளர்களுக்கு ஊதியம் வழங்க வலியுறுத்தப்பட்டது. இதில், சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி. சம்பத், மாவட்டச் செயலாளர் கே.ரங்கராஜ்,  மாவட்டப் பொருளாளர் பி.ஈஸ்வரன், மாவட்ட துணைத்தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசி னர். இதைதொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தா. கிறிஸ்துராஜிடம் அளித்த மனுவில் கூறியி ருப்பதாவது, தமிழ்நாடு அரசும், ஊரக வளர்ச் சித் துறையும், ஊராட்சிகளில் பணி செய்து வரும் ஓஎச்டி ஆப்பரேட்டர், தூய்மை பணியா ளர்களை காலமுறை ஊழியராக்கிட வேண் டும். சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் தொடுத்த வழக் கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தர வுப்படி அரசாணை 2(டி) எண்.62ன்படி ஓஎச்டி  ஆபரேட்டர்களுக்கு மாத ஊதியம் ரூபாய் 14. 780, தூய்மைப் பணியாளர்களுக்கு மாத  ஊதியம் ரூபாய் 12,780 வழங்க வேண்டும். ஊராட்சிகளில் வேலை செய்து ஓய்வு பெறும் ஓஎச்டி ஆப்பரேட்டர், தூய்மை  காவலர்களுக்கு ஓய்வுத் தொகையும், பணிக் கொடையும் வழங்க வேண்டும். ஓஎச்டி ஆப் ரேட்டர் தூய்மைப் பணியாளர்களுக்கு ஏழா வது ஊதியக்குழு நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும். பணியாளர்களுக்கு மாநி லம் முழுவதும் ஒரே மாதிரி ஊதிய நிர்ணயம்  செய்து வழங்க வேண்டும். தூய்மைக் காவ லர்களுக்கு ஊராட்சி நிதியிலிருந்து, நேரடி யாக ஊதியம் வழங்க வேண்டும். 10.05.2000  க்கு பின் காலிப்பணியிடங்களை தடையா ணையை ரத்து செய்து காலிப் பணியிடங் களை நிரப்பிட வேண்டும். சட்டமன்றத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் அறி வித்தப்படி, ஊதிய உயர்வு வழங்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட் டுள்ளது. முன்னதாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத் தில் ஒருங்கிணைப்புக்குழு பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட ஊராட்சி ஊழி யர்கள் கலந்து கொண்டனர்.