வருவாய்த்துறையினர் போராட்டம் உதகை,
ஜூன் 26- வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் உதகை ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்க ளின் கூட்டமைப்பினர் வியாழனன்று நீலகிரி மாவட்டம், உதகை ஆட்சியர் அலுவலகத்தில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு வரு வாய்த்துறை சங்கங்களின் மாவட்டத் தலைவர் சிவக் குமார் தலைமை தாங்கினார். கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க தலைவர் தீபக் மனோ பாலா, கிராம நிர்வாக உதவி யாளர்கள் சங்க தலைவர் சுரேஷ்பாபு மற்றும் நில அளவை சங்கத்தை சேர்ந்த அப்துல் காதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்ய மாம்பழ விவசாயிகள் கோரிக்கை
சேலம், ஜூன் 26- மாம்பழ விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப் பட்டு வரும் நிலையில், தமிழக அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தை சுற்றியுள்ள வாழப்பாடி, நீர்முள்ளி குட்டை, கோளாத்து கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் விவ சாயிகள் அதிகளவில் மா விவசாயம் செய்து வருகின்ற னர். இந்த வருடம் மாம்பழம் விலை கடுமையாக சரிந்துள் ளது. குறிப்பாக 500 கிலோ மாம்பழம் வெறும் ரூ.3 ஆயி ரத்திற்கு தான் விற்பனை ஆகிறது. இந்த கடுமையான விலை வீழ்ச்சியால், விவசாயிகளுக்கு பெரிய நஷ்டமடைந்துள் ளனர். ஒரு கிலோ மாம்பழத்திற்கு தமிழக அரசு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்க வேண்டும். சேலத்தில் மாம்பழக்கூழ் தொழிற்சாலை அமைக்க வேண்டும். மாம்பழ விவசாயிகள் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்வதற்கு ஏது வாக, சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள காலி இடத் தில் மாம்பழ கண்காட்சி அமைக்க வேண்டும். நஷ்டத்தை விவ சாயிகள் சமாளிக்க தமிழக அரசு ஒரு ஏக்கருக்கு ரூ.50 ஆயி ரம் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி மா விவ சாயிகள் வியாழனன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மனு அளித்தனர். முன்னதாக, மாம்பழ விவசாயிகளின் நிலையை உணர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கட்சி யின் திண்டுக்கல் தொகுதி எம்பி., சச்சிதானந்தம் ஆகி யோர் ஒன்றிய அரசுக்கு, நெருக்கடியில் உள்ள மாம்பழ விவ சாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என கடிதம் எழுதி யிருப்பது குறிப்பிடத்தக்கது.
கண்ணியம் குறைவாக நடந்த ஆய்வாளருக்கு அபராதம்
சென்னை, ஜூன் 26- சென்னையை சேர்ந்த பிரியதர்ஷினி, காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென் றுள்ளார். ஆனால், புகார் மீது வழக்கு பதிவு செய் யப்படாமல் பஞ்சாயத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தன்னை கண் ணியம் குறைவாக நடத்தியதாக கோவை பந்தய சாலை காவல் நிலைய ஆய்வாளர் சாந்த மூர்த்திக்கு எதிராக பிரியதர்ஷினி தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணை யத்தில் புகார் செய்திருந்தார். மனுவை விசாரித்த மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன், உச்ச நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் காவல் நிலையத்தில் எப்படி நடந்து கொள்ள வேண் டும் என பல உத்தரவுகளை பிறப்பித்த போதும் அதனை ஆய்வாளர் பின்பற்ற வில்லை. பெண்ணை தரக்குறைவாக நடத்தி யது மனித உரிமையை மீறிய செயல் எனக் கூறி, பாதிக்கப்பட்ட பிரியதர்ஷினிக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீட்டை ஆய்வாளர் சாந்த மூர்த்தியிடமிருந்து வசூலிக்க வேண்டும். அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.