tamilnadu

img

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

நாமக்கல், ஏப்.17- உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளில் ஒரு வர் நியமன உறுப்பினராக இருக்க வேண்டும், என உத்தர விட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து திருச்செங் கோடு நகர்மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு நகர்மன்ற சிறப்பு  கூட்டம், நகராட்சி கூட்டரங்கில், தலைவர் நளினி சுரேஷ் பாபு  தலைமையில் வியாழனன்று நடைபெற்றது. நகராட்சி பொறி யாளர் சரவணன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், புதிய  பேருந்து நிலையம் அமைக்க நகராட்சியில் இடவசதி இல் லாத காரணத்தால், ஏற்கனவே உள்ள புதிய மற்றும் பழைய  பேருந்து நிலையங்களை சுமார் ரூ.10 கோடி மதிப்பீட்டில் சீர மைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதே போல, உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளி ஒருவ ருக்கு நியமன உறுப்பினர் பதவி வழங்க வேண்டும், என உத் தரவிட்ட தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது.

இஸ்லாமிய மாணவர்களுக்கான உயர்கல்வி மாநாட்டில் முதல்வருக்கு நன்றி தெரிவிப்பு

கோவை, ஏப்.17- சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கல்வியில் முன் னேற பல்வேறு நலத்திட்டங்களை செய்து வரும், தமிழ்நாடு  முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் சார்பில், ‘இஸ்லாமிய  மாணவர்களுக்கான இரண்டாவது மாநில உயர் கல்வி மாநாடு’ கோவை, குனியமுத்தூர் பகுதியில் வியாழனன்று நடைபெற்றது. இம்மாநாட்டில், பள்ளிக்கல்வி முடித்த இஸ் லாமிய மாணவர்கள் அடுத்தக்கட்டமாக என்ன படிக்கலாம் என்பது குறித்து கல்வியாளர்கள், அறிஞர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்கினர். ஓய்வு பெற்ற நீதிபதி ஜியாவுதீன், மண்புழு விஞ்ஞானி சுல்தான் அக மது இஸ்மாயில் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து  கொண்டனர். தமிழகம் முழுவதும் இருந்து வந்த இஸ்லா மிய மாணவர்களுக்கு மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய தமிழ்நாடு முஸ்லீம் கல்வி  இயக்கம் தலைவர் சலீம், சிறுபான்மை சமூகத்திற்கு தொடர்ச் சியாக கல்வி ரீதியில் தமிழ்நாடு அரசு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதற்கு தமிழ்நாடு முதல்வர்  மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். தொடர்ச்சியாக இஸ்லாமிய சமூகத்தினு டைய எல்லா நிலைகளை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை  செயல்படுகிறது. இன்னும் உயர் கல்வி, ஆராய்ச்சி ரீதியாக வும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருக்ககூடிய முஸ்லீம்க ளுக்கு கலைஞர் காலத்தில் திமுக அரசு வழங்கிய இட  ஒதுக்கீடு முழுமையாக பயன்படுத்திக் கொண்டு, முன்னேறிய  சமூகமாக மாற அந்த வாய்ப்புகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.  அதற்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம், என்றார்.

தேயிலைத் தோட்டங்களை தாக்கும் சிவப்பு சிலந்தி: கட்டுப்படுத்த தோட்டக்கலை துறையினர் அறிவுரை

உதகை, ஏப்.17- தேயிலைத் தோட்டங்களில் சிவப்பு சிலந்தி தாக்குதலை  கட்டுப்படுத்த தோட்டக்கலை துறையினர் விவசாயிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதுகுறித்து தோட்டக்கலை துறை இணை இயக்குநர்  சிபிலா மேரி வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரியில்  தேயிலை விவசாயம் பிரதான தொழிலாக மேற்கொள்ளப் பட்டு வருகிறது. தேயிலையின் பருவநிலை மாறுபாடுகளுக்கு  ஏற்றவாறு சில பூச்சிகளும், நோய்களும் அவ்வப்போது தாக்கி  மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது. பனி மற்றும் குளிர் காலங்களில் கொப்புள நோய் தாக்குதலும், வெப்ப அதிகரிக் கும் போது சிவப்பு சிலந்தி தாக்குதலும் அதிகமாக காணப்ப டும். கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்த காரணத்தினால், தேயிலை பயிர்க ளில் சிவப்பு சிலந்தியின் தாக்கம் அதிகமாக காணப்படு கிறது. பொதுவாக மழை பெய்யும் பொழுது சிலந்திகள் அழிக் கப்பட்டு தாக்குதல் குறையும். கடந்த 10 நாட்களில் நீல கிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் சிவப்பு  சிலந்திகளின் தாக்குதல் வெகுவாக குறைய வாய்ப்புள் ளது. மேலும், வெப்பம் அதிகரிக்கும் போது இச்சிலந்தி களின் தாக்குதலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தோட் டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, தமிழ்நாடு பல் கலைக்கழகத்தின் வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பாக விவசாயிகளுக்கு சில பரிந்துரைகள் வழங்கப் படுகிறது. சிவப்பு சிலந்தியின் தாக்குதலை கட்டுப்படுத்த நிழல் தரும்  மரங்களை 40 அடிக்கு ஒரு மரம் வீதம், தேயிலை தோட்டங் களில் நட வேண்டும். நிழல் தரும் மரங்கள் இருக்கும் இடங்க ளில் இச்சிலந்தியின் தாக்குதல் மிகக் குறைவாகவே இருக் கும். சிலந்திகளின் தாக்குதலை கட்டுப்படுத்த தெளிப்பு நீர்  பாசனம் உதவுகிறது. சிலந்திகளின் தாக்குதல் அதிகமாகும் பட்சத்தில் வெர்டி சிலியம் லெகானி என்ற பூஞ்சாணத்தை ஒரு  லிட்டர் தண்ணீருக்கு 2 கி என்ற அளவில் கலந்து தெளித் தால் சிலந்திகளின் எண்ணிக்கை குறைந்து கட்டுப்படுத்தப் படும். அசா டிராக்டின் 1000 பிபிஎம், தாவர பூச்சிக்கொல் லியை லிட்டருக்கு 2 மி.லி என்ற விகிதத்தில் கலந்து தெளித் தும் சிவப்பு சிவந்தியை கட்டுப்படுத்தலாம், என கூறப்பட்டுள் ளது.

மத போதகரின் உறவினரும் போக்சோவில் கைது

கோவை, ஏப்.17- சிறுமிகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வழக்கில்,  கிறிஸ்தவ மத போதகரின் உறவினரும் போக்சோவில் கைது  செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகா, வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ். இவர் கோவை ஜி.என்  மில்ஸ் பகுதியில் தங்கி இருந்து காந்திபுரம் கிராஸ்கட் சாலை யில் உள்ள ஆலயத்தில் கிறிஸ்தவ மத போதகராக இருந்து  வந்தார். கடந்தாண்டு மே மாதம் ஜான் ஜெபராஜ் வீட்டில்  நடந்த நிகழ்ச்சியில், 17 வயது சிறுமி மற்றும் அவருடைய தோழி யான 14 வயது சிறுமிகளிடம், ஜான் ஜெபராஜ் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவை,  காட்டூரில் உள்ள மாநகர மத்திய அனைத்து மகளிர் காவல்  நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீ சார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கேரளம்  மாநிலம், மூணாறு பகுதியில் உள்ள ஒரு விடுதியில் பதுங்கி யிருந்த ஜான் ஜெபராஜை கைது செய்தனர். இதனிடையே, இந்த வழக்கில் ஜான் ஜெபராஜின் உறவினரான கோவை,  துடியலூர் பகுதியைச் சேர்ந்த பெனட் ஹரிஸ் என்பவரை யும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த னர்.

அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ராசிபுரம் அரசு கலைக்கல்லூரியில் நடை பெற்ற பட்டமளிப்பு விழாவில் பலர் கலந்து  கொண்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் திருவள் ளுவர் அரசு கலைக்கல்லூரியில் பட்டமளிப்பு  விழா புதனன்று நடைபெற்றது. இவ்விழா விற்கு கல்லூரி முதல்வர் சி.பானுமதி தலைமை வகித்தார். தருமபுரி மண்டல கல் லூரி கல்வி இணை இயக்குநர் பா.சந்தியா  செல்வி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங் களை வழங்கினார். இளநிலை, முதுநிலை பயின்ற 685 மாணவ, மாணவிகள் பட்டம்  பெற்றனர். இவ்விழாவில் துறைத்தலைவர் கள், பேராசிரியர்கள், கௌரவ விரி வுரையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.