கொடி மரங்களை அகற்றும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க கோரிக்கை
ஈரோடு, ஏப்.28– சாலை ஓரங்களில் அமைக்கப் பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களை அகற்றும் நடவ டிக்கையை, நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு வரும் வரையில் நிறுத்தி வைக்க வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியு றுத்தியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத் தின் மதுரை கிளை, சாலையோரங் களில் அமைக்கப்பட்டுள்ள அரசி யல் கட்சிகளின் கொடி கம்பங்களை அகற்றும் உத்தரவை, கடந்த 27.1.2025 அன்று பிறப்பித்தது. குறிப் பிட்ட காலக்கெடு வகுத்து, கட்சிகள் தாங்களே அவற்றை அகற்றாவிட் டால், சம்பந்தப்பட்ட நிர்வாகம் தானாகவே அகற்றி, அதற்கான செலவை குறித்த கட்சிகளிடமி ருந்து வசூலிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவித்திருந் தது. இந்நிலையில், கொடிக்கம்பங் களை அகற்ற வேண்டுமென பிறப் பித்த உத்தரவை எதிர்த்து மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 21.04.2025 அன்று மேல்முறையீட்டு மனு தாக்கல் செய் யப்பட்டது. இந்த மனுக்கள் 25.04.2025 சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மாண்பமை நீதிபதிகள் நிஷாபானு மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர் வில் விசாரணைக்கு வந்தது. விசார ணையில் மூத்த வழக்கறிஞர் என். ஜி.ஆர்.பிரசாத் ஆஜரானார். வழக்கு விசாரணை கோடை விடு முறை காலத்திற்கு பிறகு விசாரிக்க ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கி டையில், ஈரோடு மாநகராட்சி மற் றும் நெடுஞ்சாலைத்துறையினர், அரசியல் கட்சி அலுவலகங்க ளுக்கு நேரில் சென்று கொடி கம் பங்களை அகற்ற அறிவிப்புகளை வழங்கி வருகின்றனர். மார்க்சிஸ்ட் கட்சியின் அலுவலகத்திலும் அதி காரிகள் வந்து அறிவிக்கை கொடுத் தனர். இதனை ஏற்க முடியாது என மார்க்சிஸ்ட் கட்சி மறுத்துள்ளது. மேலும், இதுகுறித்து மாவட்ட ஆட் சியரிடம் உரிய மனுவும் வழங்கி னர். அந்த மனுவில், “உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு மனுக்களும், சீராய்வு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் கோடை விடு முறை காலத்திற்குப் பிறகு விசார ணைக்கு வரும். ஆகையால், விசா ரணை முடிவடையும் வரை கொடி கம்பங்களை அகற்றும் நடவடிக் கையை மற்றும் அதற்கான அறி விப்புகளை நிறுத்தி வைக்க வேண் டும்” என்று சிபிஎம் ஈரோடு மாவட்டச் செயலாளர் ஆர். ரகுராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.