காட்டு மாடு முட்டி உயிரிழந்த வனக்காவலருக்கு இழப்பீடு வழங்க உறவினர்கள் கோரிக்கை
கோவையில் பணியின் போது காட்டு மாடு முட்டி உயிரிழந்த வனக்காவலர் அசோக்குமார் குடும்பத்திற்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை வைத் துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோவில் கானிக்காரன் மலைவாழ் பழங் குடி கிராமத்தை சேர்ந்தவர் அசோக் குமார் (52). இவர் கோவை மாவட் டம் பெரியநாயக்கன்பாளையம் வனச் சரகத்தில் வனக்காப்பாளராக பணி யாற்றி வந்தார். கடந்த 10 ஆம் தேதியன்று பெரியநாயக்கன்பாளை யம் வனச்சரகம் தோலம்பாளையம் பகு தியில் உள்ள மலிவீரன் என்பவரது தோட்டத்தில் காட்டு மாடு புகுந்ததாக அசோக்குமாருக்கு தகவல் கிடைத் தது. அதன் பேரில் வேட்டை தடுப்பு காவலர்களுடன் அங்கு சென்ற அசோக் குமார் தோட்டத்தில் இருந்த காட்டு மாட்டை விரட்டும் பணியில் ஈடுபட்டிருந் தார். அப்போது புதரில் மறைந்திருந்த காட்டுமாடு திடிரென அசோக்குமாரை கொம்பால் குத்தி வீசியது. இதில் குடல் சரிந்த நிலையில் அவர் மயக்கமடைந் தார். இதனையடுத்து அங்கிருந்த சக பணியாளர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அசோக்குமார் புத னன்று காலை உயிரிழந்தார். காட்டு மாடு முட்டியதில் மார்பு எழும்பு உடைத்து நுரையீரலில் ரத்தபோக்கு ஏற்பட்டதே உயிரிழப்பிற்கான காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள் ளது. இதையடுத்து அசோக்குமார் உட லுக்கு முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அன்வருதீன், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், வனச்சரகர் கள் உள்ளிட்ட வனத்துறை ஊழி யர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் சொந்த ஊருக்கு ஆம்புலென்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து பேசிய அவரது சகோ தரர் சுரேஷ்சாமி, “பழங்குடி கிராமத் தில் பிறந்து வனத்துறையில் பணி யாற்றிய அசோக்குமாருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். அவரது மகள் தான் பழங்குடி கிராமத்தில் இருந்து வேளாண்மை பட்டப்படிப்பிற்குச் செல் லும் முதல் பட்டதாரி, மகன் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மனநலம் பாதிக்கப்பட்டவர். மேலும், 25 ஆண்டு களுக்கு மேலாக பணியாற்றிய அசோக்குமார் காட்டு மாட்டை விரட்ட சென்ற போது உயிரிழந்தார். அசோக்கு மாருக்கு வயது 52, வனத்துறையில் வயது ஏற்ப பணிகளை கொடுக்க வேண்டும். தற்போது உயிரிழந்த அசோக்குமார் குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். பணி யின் போது உயிரிழந்த காவலர்களுக்கு வழங்கப்படுவது போன்று இழப் பீட்டை வழங்க வேண்டும். தாமதிக்கா மல் அவரது மகளுக்கு அரசு பணி வழங்க வேண்டும். மேலும் இராணு வத்தினருக்கு இருப்பது போல வனத் துறை ஊழியர்களுக்கு என்று தனி மருத் துவ கட்டமைப்புகளை அமைக்க வேண் டும். இரவு பகல் பார்க்காமல் கடுமை யாக பணியாற்றும் வனத்துறை ஊழி யர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.