tamilnadu

img

சாலையோரம் உள்ள திறந்தவெளி கிணற்றால் விபத்து ஏற்படும் அபாயம்

சாலையோரம் உள்ள திறந்தவெளி  கிணற்றால் விபத்து ஏற்படும் அபாயம்

தருமபுரி, மே 21- பாலக்கோடு அருகே தேசிய நெடுஞ்சாலை, மாநில, ஊராட்சி சாலைக ளின் அருகே உள்ள திறந்த வெளி கிணறுகளால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகி றது. தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே காவப் பட்டி நெடுஞ்சாலை பகுதி யில் தடுப்புச்சுவர் இல்லாமல் அபாயகரமான திறந்தவெளி கிணற்றால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த நெடுஞ்சாலை, பாலக்கோடு - பெரியம்பட்டி தேசிய நெடுஞ் சாலையை இணைக்கும் பிரதான சாலையாக  உள்ளதால் தினந்தோறும் ஆயிரக்கணக் கான வாகனங்கள் சென்று வருகின்றன. இதே போன்று, கல்கூடஹள்ளி புதிய தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாலக்கோடு நகர பகுதியில் இருந்து ராயக்கோட்டை, ஓசூர், மாரண்டஹள்ளி, பெங்களூரு ஆகிய பகுதி களுக்கும், கோவை, சேலம், தருமபுரி ஆகிய  பகுதிகளிலிருந்து பாலக்கோடு, பெல்ரம் பட்டி, கேசர்குளி அணை உள்ளிட்ட பகுதிக ளுக்கு சென்றுவர பாலத்துடன் கூடிய அணுகு சாலை அமைக்கப்பட்டது. கல்கூடஹள்ளி அனுகுசாலையோரம் தடுப்புகள், எச்ச ரிக்கை பலகை இல்லாத திறந்தவெளி கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றின் ஓரம் பெய ரளவிற்கு சில தடுப்புகள் போடப்பட்டுள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இச்சா லையில் புதிதாக செல்பவர்கள் வழித்தவறி கிணற்றில் விழ நேரிடும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து, சாலையோரம் உள்ள திறந்தவெளி கிணறுகள் அருகே தடுப்புகள் அமைக்க வேண்டும், என அப்பகுதி பொதுமக்கள் மற் றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள் ளனர்.