குறுக்குப்பாறையூரில் குப்பை கொட்ட இடைக்கால தடை
39 நாட்கள் நீடித்த விவசாயிகள் போராட்டத்திற்கு இடைக்கால தீர்வு
39 நாட்களாக நீடித்த விவசாயி கள், பொதுமக்கள் போராட்டத் தின் வெற்றியாக, குறுக்குப்பாறை யூரில் குப்பை கொட்ட உயர்நீதி மன்றம் இடைக்கால தடை விதித் துள்ளது. சேலம் மாவட்டம், சங்ககிரி வட் டம், அரசிராமணி பேரூராட்சி பகுதி யில் சேகரமாகும் குப்பைக்கழிவு களை, ஏற்கனவே கொட்டிய இடத்தை விட்டுவிட்டு, குறுக்குப் பாறையூரில் கொட்டும் பணி நடந்து வருகிறது. விவசாயத்தையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கிற கார ணத்தினால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 8 மாதங்களாக பாதிக்கப்படும் விவசாயிகளும், பொதுமக்களும் பல்வேறு போராட் டங்கள் நடத்தி வருகின்றனர். குப்பைக் கொட்டும் வாகனங் களை சிறைப்பிடித்தல், மறியல் கைது என கடந்த ஒரு மாதத்திற் கும் மேலாக தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் தலைமையில், தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது. காவல் துறையினர் மறியல் செய்வோரை கைது செய்து மண்ட பத்தில் அடைத்து விட்டு, குப்பை யைக் கொட்டுவது, சுற்றுசுவர் எழுப்புவது, கட்டிடம் கட்டுவது என பணியை இரவு வரை செய்வது, அதன்பின் கைது செய்யப்பட்ட வர்களை விடுவிப்பது என தினந் தோறும் அநியாயம் செய்து வந்த னர். ஒருதலைபட்சமாக செயல்ப டும் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் டவுன் பஞ்சாயத்து, சேலம் மண்டல நிர்வாகம், சேலம் மாவட்ட ஆட்சி யர் உள்ளிட்ட வருவாய்துறை நிர் வாகம் போன்றவற்றின் அநியாயச் செயலைக் கண்டித்தும் தமிழ்நாடு முதல்வர் தலையிட்டு உடனே தீர்வு காணக்கோரி சனியன்று மாவட்டம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இப்பிரச்சனை சம்பந்தமாக அப் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி என் பவர் விவசாய சங்கத்துடன் இணைந்து சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கள் அரசிராமணி பேரூராட்சி குப்பைக் கழிவுகளை குறுக்கு பாறையூரில் கொட்ட இடைக்கால தடை விதித்தனர். 39 ஆவது நாளாக புதனன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் முடிவில், இந்த உத்தரவு வந்ததைத் தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்த னர். இப்போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் ஏ.ராமமூர்த்தி, துணைத் தலைவர் பி.தங்கவேலு, வழக்கறி ஞர் பழனிச்சாமி, விவசாயிகள் சங்க ஒன்றியத் தலைவர் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.