இண்டூர்: குப்பைகள் எரிப்பால் மூச்சுத்திணறல்!
தருமபுரி, மார்ச் 31 – இண்டூரில், குப்பைகளை சாலையோரம் திறந்தவெளியில் எரிப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக் குள்ளாகி வருகின்றனர். தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றி யம், இண்டூர் பேருந்து நிலையத்தைச் சுற்றி யுள்ள பகுதியில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட் டோர் வசித்து வருகின்றனர். இண்டூர், பி.எஸ். அக்ரஹாரம் இடையே உள்ள ஏரி பகுதியில் ஊராட்சிக்குட்பட்ட குப்பைகள் மற்றும் கோழி இறைச்சிக் கழிவுகள் சாலையோரம் கொட்டப்படுகின்றன. இவை அவ்வப்போது தீ வைத்து எரிக்கப்படுவதால், சுற்றுவட் டாரப் பகுதி குடியிருப்புகளில் வசிக்கும் மக் கள் மற்றும் தருமபுரி - ஒகேனக்கல் சாலை யில் செல்லும் வாகன ஓட்டிகள் காற்று மாசு பாட்டால் மூச்சுத் திணறுகின்றனர். மேலும், குப்பைகளை தரம் பிரிக்கா மல் பிளாஸ்டிக் முதல் அனைத்து வகை யான குப்பைகளும் ஒரே இடத்தில் எரிக்கப் படுவதால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை தரம் பிரித்து அப்புறப்படுத்த வேண்டும் என்றும், திறந்த வெளியில் குப் பைகளுக்கு தீ வைப்பதை தடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.