tamilnadu

img

ஜி ஸ்கொயர் கட்டிடத்தின் தண்ணீர் தொட்டியில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

கோவை சூலூரில் உள்ள ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான கட்டிடத்தின் தண்ணீர் தொட்டியில் விழுந்து தொழிலாளி உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை சூலூரில் உள்ள ஜி ஸ்கொயர் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சொந்தமான கட்டிடத்தின் தண்ணீர் தொட்டியில் விழுந்து கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த ஹரி என்பவர் உயிரிழந்துள்ளார். கடந்த  6 மாதங்களாக இந்த கட்டிடத்தில் கட்டிட பணியாற்றி வரும் இவர் திருமணம் ஆகி மனைவியை பிரிந்து இருந்து வந்ததாகவும், இரவு கட்டிடத்தில் வேலையை முடித்துவிட்டு கட்டிடத்தின் முன்பு உள்ள தண்ணீர் தொட்டி அருகே அமர்ந்து ஹரி மது அருந்தியதாக கூறப்படுகிறது. 

ஹரி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து இறந்து இருப்பது முதலில் பார்த்த சக தொழிலாளிகள், உடனடியாக இது குறித்து சூலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் போலீசார் ஹரியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.