tamilnadu

img

தொண்டாமுத்தூர் அருகே யானை தாக்கி முதியவர் பலி

தொண்டாமுத்தூர் அருகே யானை தாக்கியதில் முதியவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே வஞ்சியம்மன் நகர் பகுதியில் இன்று காலை ஒற்றையானை புகுந்தது. அப்போது வீட்டின் அருகில் இருந்த ஆறுமுகம் என்ற முதியவரை காட்டு யானை தாக்கியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஆறுச்சாமி, முத்து என்ற இரண்டு இளைஞர்கள் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர்கள் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
 

;