போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பணியிடை நீக்கம்
அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் தர்ணா
நாமக்கல், ஜூன் 17- கோரிக்கைகளுக்காக போராட்டத் தில் ஈடுபட்ட சங்கத்தின் நிர்வாகிகளை பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற் கான உத்தரவை ரத்து செய்ய வேண் டும், என வலியுறுத்தி அங்கன்வாடி ஊழி யர், உதவியாளர் சங்கத்தினர் தர்ணா வில் ஈடுபட்டனர். வாழ்வாதாரக் கோரிக்கைகளுக் காக போராட்டத்தில் ஈடுபட்ட அங்கன் வாடி ஊழியர் சங்க சிவகங்கை மாவட் டச் செயலாளர் மற்றும் தென்காசி மாவட் டச் செயலாளர் ஆகியோரின், பணி யிடை நீக்கம் செய்தவற்கான உத்த ரவை உடனடியாக ரத்து செய்ய வேண் டும். ஆறு வருடங்களாக செல்போன் வழங்காத 22 மாவட்டத்திற்கும் புதிய செல்போன் வழங்க வேண்டும். பதவி உயர்வு வழங்க வேண்டும். மாநிலம் முழுவதும் உள்ள பணியாளர், உதவி யாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தி னர் செவ்வாயன்று மாலை நேர தர்ணா வில் ஈடுபட்டனர். நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற தர்ணாவிற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாண்டி மாதேவி தலைமை வகித்தார். நிர்வாகி கள் குர்ஜித் பேகம், அனுராதா, அம் பிகா, ஜமுனா, ரேவதி ஆகியோர் முன் னிலை வகித்தனர். இதில் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஜெயக் கொடி, சிஐடியு மாவட்டச் செயலாளர் என்.வேலுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.