மழையில் நனைந்த நெல்கள் வீணாகுவதால் கவலை
கோபி, மே 17- கோபி அருகே நேரடி நெல் கொள் முதல் நிலையங்களில் தேங்கியிருந்த நெல் மூட்டைகள் மற்றும் கொள்முதல் செய்ய கொட்டப்பட்டிருந்த நெல், மழையில் நனைந்து முளைத்து வீணா குவதால் விவசாயிகள் கவலை அடைந் துள்ளனர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ள தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனப் பகுதியில் விவசாயிகள் அறு வடை செய்த நெல்லை கொள்முதல் செய்யும் வகையில் நஞ்சை புளியம் பட்டி, பாரியூர், டி.என்.பாளையம், துறை யம்பாளையம் உள்ளிட்ட 30க்கும் மேற் பட்ட பகுதிகளில் அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக் கப்பட்டு கொள்முதல் செய்து வருகின்ற னர். இந்நிலையில் நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்த நெல் மூட்டைகளை தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் லாரிகள் மூலம் அரவை ஆலைகளுக்கு அனுப்பி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே லாரி கள் வந்து சென்றதால் நெல் கொள் முதல் நிலையங்களில் நெல் மூட்டை கள் குவியத் தொடங்கின. இந்நிலை யில், கோபி மற்றும் அதன் சுற்று வட்டா ரப் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்க ளாக இரவு பெய்த மழையால் அறு வடை செய்து கொண்டு வந்து கொட்டப் பட்டிருந்து நெல் நனைந்து முளைத்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இத னால், விவசாயிகள் கவலை அடைந் துள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடி நடவ டிக்கை மேற்கொண்டு நெல் கொள் முதல் நிலையங்களில் கொள்முதல் செய்து தேங்கியுள்ள மூட்டைகளை விரைந்து அனுப்ப வேண்டியும் அறு வடை செய்து கொள்முதல் செய்ய கொட் டப்பட்டிருக்கும் நெல்லை விரைந்து கொள்முதல் செய்து மழையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என விவசாயி கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.