tamilnadu

img

தோழர் ஆறுமுகம் நினைவேந்தல்

தோழர் ஆறுமுகம் நினைவேந்தல்

ஈரோடு, ஜூன் 23- மார்க்சிஸ்ட் கட்சியின் மறைந்த தோழர் ஆறு முகம் நினைவேந்தல் நிகழ்வு திங்களன்று நடை பெற்றது. ஈரோடு மாவட்டம், வெண்டிபாளையம் பகுதி யில் வசித்து வந்தவர் பெ.ஆறுமுகம். விவசாயி யான ஆறுமுகம் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் இயக் கத்தில் இணைந்து செயல்பட்டு வந்தார். தனக்கு சொந்தமான மோளகவுண்டம்பாளையத்திலிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான இடம் மற்றும் கான்க் ரீட் கட்டடத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு  வழங்கினார். அவரது 15 ஆம் ஆண்டு நினைவேந் தல் நிகழ்வு ஈரோடு மாநகராட்சி 60 ஆவது வார்டு கிளையில் திங்களன்று நடைபெற்றது. கிளைச் செய லாளர் ஆர்.மாரிமுத்து தலைமையில் மூத்த தலை வர் கே.துரைராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆர்.விஜயராகவன், தாலுகா செயலாளர் என்.பாலசுப்பிரமணி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பா. லலிதா, பி.ராஜா உள்ளிட்டோர் பங்கேற்று, அவரது  நினைவுகளை பகிர்ந்தனர். முடிவில், சி.வீரபாண்டி யன் நன்றி கூறினார்.