சிபிஎம் மாநாட்டையொட்டி பிரச்சார இயக்கம்
திருப்பூர், மார்ச் 22- ரங்கநாதபுரத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 15 வேலம்பாளையம் நகரக் குழு சார்பில் வெள்ளியன்று அகில இந்திய மாநாட்டை யொட்டி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாட்டை திருப்பூர் மாவட்டம், ரங்கநாதபுரம் பகுதியில் பொது மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பிரச்சார இயக்கம் சனியன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கட்சியின் நகரக்குழு உறுப் பினர் வி.லட்சுமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், நகரச் செயலாளர் ச.நந்தகோபால், நகரக்குழு உறுப்பினர் அ.உமாநாத், கிளைச் செயலா ளர் எஸ்.செல்வகுமார், வாலிபர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் க.நிருபன் சக்கரவர்த்தி, பனியன் சங்க பகுதி குழுத் தலைவர் மு. பாண்டியராஜ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். முடிவில் நகரக்குழு உறுப் பினர் ப.செல்வி நன்றி கூறினார். முன்னதாக திருப்பூர் கலைக்குழு சார்பில் ஒன்றிய மோடி அரசை அம்பலப்படுத்தும் குறு நாடகம் போடப்பட்டது. மேலும், மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களை பல்லடம் வீரமுத்து பாடினார். மக்கள் பெருந்திரளாகக் நாடகத்தின் ஒவ் வொரு காட்சியும் வரவேற்றனர்.
லகிரியில் ஏப்.2 இல் முழு அடைப்பு போராட்டம்
நீலகிரி மாவட்டத்தில் அமலில் உள்ள இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண் டும் என்பது உட்பட 10 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி, ஏப்ரல் 2ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்த வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். கோடை காலத்தில் நீலகிரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிக ரிப்பதால், போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இ-பாஸ் நடைமுறையை அமல் படுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டது. இதையடுத்து கடந்த மே முதல் நீலகிரிக்கு வரும் அனைத்து வாகனங்க ளுக்கும் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டது. இந்த நடைமுறையால் சுற்றுலாப் பயணி களின் வருகை குறைந்ததால், வியாபாரிகள் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில், ஏப் ரல் மாதம் முதல் நீலகிரிக்கு வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களும், வார இறுதி நாட்க ளில் 8 ஆயிரம் வாகனங்களும் மட்டுமே அனுமதிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நீல கிரி மாவட்ட வணிகர் சங்கங்களின் பேர மைப்பு மற்றும் பல்வேறு சங்கங்களின் முக் கிய நிர்வாகிகள் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதி யில் வெள்ளியன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, தமிழ்நாடு வணி கர் சங்கங்களின் பேரமைப்பு நீலகிரி மாவட் டத் தலைவர் முகமது பாரூக் செய்தியா ளர்களிடம் கூறுகையில், “இ-பாஸ் நடை முறையால் நீலகிரி வரும் சுற்றுலாப் பயணி களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துள்ளது. இந்நிலையில், ஏப்ரல் 1-ம் தேதி முதல் வார நாட்களில் 6 ஆயிரம் சுற் றுலா வாகனங்களும், சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் 8 ஆயிரம் சுற்றுலா வாக னங்களும் மட்டுமே அனுமதிக்க வேண்டு மென சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித் துள்ள உத்தரவால் நீலகிரி மாவட்டத்தின் சுற்றுலாத் தொழில் கடுமையாக பாதிக்கப் படும். நீலகிரி மாவட்டத்தில் அமல்படுத்தப்பட் டுள்ள இ-பாஸ் முறையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். நடைமுறைக்கு வர உள்ள வாகன கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, 29 ஆம் தேதி மாவட் டம் முழுவதும் கருப்புக்கொடி போராட்ட மும், ஏப்.2 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டமும் நடத்த முடிவு செய்யப்பட்டுள் ளது” என்றார்.