வெற்றிலை, பாக்கு வைத்து அதிகாரிகளுக்கு அழைப்பு
நாமக்கல், மே 5 – மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலு வலக அதிகாரிகள், பொதுமக் களை சந்திக்க அலட்சியப்படுத்திய நிலையில், வெற்றிலை, பாக்கு வைத்து அழைத்த சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் குமார பாளையம் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் திங்க ளன்று மாதந்திர கலந்தாய்வுக் கூட் டம் நடைபெற்றது. இதில் அப்பகுதி யைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாய ஆலைகளால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து புகார் அளிக்க வந்தனர். அப்போது, மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி, அனைவரையும் ஒன்றாக சந்திக்க முடியாது என் றும், செய்தியாளர்களுக்கு அனு மதி இல்லை என்றும் கூறியதாக தெரிகிறது. இதனால் அதிருப்திய டைந்த பொதுமக்கள், அனைவரை யும் இணைத்து கூட்டம் நடத்த வேண்டும் என்றும், செய்தியாளர்க ளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். மேலும், அலுவலகத்திற்குள் கூட்டம் நடத்த விருப்பமில்லை என்றும், வெளிய வந்து புகார்களை கேட்க வேண்டும் என்றும் கூறினர். அதிகாரி வெளியே வருவதாக கூறியும் நீண்ட நேரம் வராததால், பொதுமக்கள் வெற் றிலை, பாக்கு வைத்து அழைத்தால் தான் வருவார் என்று முடிவு எடுத்து. வெற்றிலை, பாக்கு, பழம் சகிதம் தட்டில் வைத்து எடுத்துச்சென்ற னர். இதனை அறிந்த மாசு கட்டுப் பாட்டு வாரிய அதிகாரி செந்தில் குமார் வெளியே வந்தார். அங்கு ஏற்கனவே வந்திருந்த குமார பாளையம் போலீசாரும் இருந்த னர். பொதுமக்கள் அதிகாரியிடம், சாய ஆலைகள் சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை சாக்கடை வழியாக காவிரியில் கலப்பதாகவும், கடந்த ஆறு மாதங்களாக புகார் அளித் தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினர். மேலும், மக்கள் குறை தீர்க்கும் கூட்டத் திற்கு முறையாக அனுமதிப்ப தில்லை என்றும் வாக்குவாதம் செய்தனர். பொதுமக்களின் கேள்விக ளுக்கு பதிலளிக்க முடியாமல் திண றிய அதிகாரி செந்தில்குமார், நடவ டிக்கை எடுப்பதாக கூறினார். ஒரு மணி நேரம் நீடித்த வாக்குவாதத்திற் குப் பிறகு, ஒரு வாரத்திற்குள் இப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண் டும் என்றும், இல்லையென்றால் பெரிய போராட்டம் நடத்தப்படும் என்றும் பொதுமக்கள் எச்சரித்த னர். பின்ன அனைவரும் கலைந்து சென்றனர். வெற்றிலை, பாக்கு வைத்து அதிகாரியை அழைத்த இந்த சம்ப வம் குமாரபாளையத்தில் பரபரப் பாக பேசப்பட்டது.