20 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து
வால்பாறை, மே 18- வால்பாறையில் அரசு பேருந்து 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளா னதில், 40க்கும் மேற்பட்ட பய ணிகள் படுகாயமடைந்தனர். திருப்பூர் மாவட்டத்திலி ருந்து ஞாயிறன்று அதிகாலை 12.30 மணியளவில் வால் பாறைக்கு அரசு பேருந்து புறப்பட்டது. பேருந்தை ஓட்டுநர் கணேஷ் (49), நடத்துநர் சிவராஜ் ஆகியோர் இயங்கியுள்ளனர். இப்பேருந்தில் 72 பேர் பயணித்துள்ளனர். சுமார் 3 மணியளவில் வால்பாறை அருகே உள்ள கவர்கள் எஸ்டேட் பகுதி, 33 ஆவது கொண்டை ஊசி வளைவில் வரும் போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, 20 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதுகுறித்து தகவலறிந்து வந்த வால் பாறை காவல் துறையினர், 108 ஆம்பு லன்ஸ் உதவியுடன் அனைவரையும் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஓட்டுநர் கணேசன் பலத்த காயமடைந் தார். அவர் மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட் டர். மேலும் கை, கால், தலை போன்ற பல் வேறு இடங்களில் 40க்கும் மேற்பட்ட பயணி களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இவ்விபத்து குறித்து வால்பாறை காவல் துறையினர் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கார்ட் கவுன்சில் நிர்வாகிகள் தேர்வு
ஈரோடு, மே 18- அகில இந்திய கார்ட் கவுன்சிலின் சேலம் கோட்ட நிர்வாகி கள் தேர்வு செய்யப்பட்டனர். சேலம் கோட்ட அகில இந்திய கார்ட் கவுன்சிலின் ஈராண்டு பொதுக்குழு கூட்டம் ஞாயிறன்று. ஈரோடு துலிப் ஹோட்ட லில் நடைபெற்றது. மன்றத்தின் மண்டல உதவி பொதுச்செய லாளர் ராமசுந்தரம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண் டார். தட்சிண ரயில்வே ஊழியர் சங்கத்தின் (டிஆர்இயு) உதவி பொதுச்செயலாளர் கே.பிஜு, ரயில்வே ஓய்வூதியதாரர்கள் சங்க கோட்டச் செயலாளர் சி.முருகேசன் ஆகியோர் வாழ்த் திப் பேசினர். இக்கூட்டத்தில் கோட்டத் தலைவராக பி.செந்தில் குமார், செயலாளராக என்.வினோத்குமார், பொருளாளராக அன்சார் ஷெரீப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
சேலம், மே 18- அரசுப்பள்ளியில் 1980 - 81 ஆம் ஆண்டு படித்த மாணவ, மாணவிகள் 45 ஆண்டுகளுக்குப் பிறகு குடும்பத்துடன் சந்தித்து அன்பை பரிமாறிக் கொண்டனர். சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி பகுதியில் அரசு மேல் நிலைப்பள்ளி செயப்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த 1980 - 81 ஆம் ஆண்டு பயின்ற மாணவ மாணவிகள் 45 ஆண்டு களுக்குப் பிறகு கன்னங்குறிச்சி பகுதியில் ஞாயிறன்று சந் தித்துக் கொண்டனர். 10 ஆம் வகுப்பு பயிற்றுவித்த ஆசிரியர்க ளுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர்.
33.33 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி சாதனை!
நாமக்கல், மே 18- திருங்செங்கோடு தனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 33 நிமிடங்கள் 33 விநாடிகள் சிலம்பம் சுற்றி சாதனை படைக்கப் பட்டது. இந்தியக் கலை மற்றும் கலாச்சாரப் பேரவை நிறுவனம், திருங்செங்கோடு கேஎஸ்ஆர் கலை அறிவியல் கல்லூரி ஆகி யவை இணைந்து, நோபல் வேர்ல்ட் ரெக் கார்ட்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ முயற் சியாக, தொடர்ச்சியாக 33 நிமிடங்கள் 33 விநா டிகள் வரை 16 கட்டங்களிலான சிலம்பம் சுழற்றும் நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற் றது. இந்தியக் கலை மற்றும் கலாச்சாரம் பேர வையின் செயலாளர் வினோத் குமார் ஒருங்கி ணைத்தார். எல்.அரவிந்த் லட்சுமி நாரா யணன், லாவண்யா ஜெயகரா ஆகியோர் அதிகாரப்பூர்வமாக பங்கேற்று, சாதனையை பதிவு செய்தனர். தேனி, மதுரை, சென்னை, காரைக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல் வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 30க்கும் மேற் பட்ட சிலம்பக் குழுக்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்ற இந்த சாதனை நிகழ்ச்சி கேஎஸ்ஆர் கல்வி நிறு வனத்தில் நடைபெற்றது. இதில், கேஎஸ்ஆர் கலை அறிவியல் கல்லூரி முதல்வர் பிரசன்ன ராஜேஷ்குமார், கல்லூரியின் தேசிய மாண வர் படை தலைவர் கேசவமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியை தற்காலிக பணிநீக்கம்
சேலம், மே 18- அனுபவ சான்றிதழ்களில் முறைகேடு நடந்ததை தொடர்ந்து, சேலம் பெரியார் பல் கலைக்கழக பேராசிரியை தற்காலிமாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் துறை பேராசிரியையாக பணிபுரிபவர் தனலட்சுமி. இவர் தனது அனு பவ சான்றிதழ்களில் முறைகேடு செய்துள் ளார் என புகார் எழுந்தது. இதனை விசாரித்த பேராசிரியர் குழுவினர், தனலட்சுமி அனு பவ சான்றிதழில் முறைகேடு செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பேராசிரி யர்கள் குழு, அவர் மீது நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி யது. அதன்பேரில், தனலட்சுமியை தற்காலிக பணிநீக்கம் செய்து பல்கலைக்கழக நிர்வா கம் உத்தரவிட்டுள்ளது.
ஆக்கிரமிப்புகள் அகற்றி சாலை அமைப்பு
கோவை, மே 18- கணியூரில் ஆக்கிரமிப்பு களை அகற்றி சாலை அமைக்க அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், தற்போது சாலை அமைக்கும் பணி முழுவீச் சில் நடத்தி அமைக்கப்பட்ட தால், பொதுமக்கள் மகிழ்ச்சி யடைத்து உள்ளனர். கோவை மாவட்டம், சூலூர் தாலுகா, கணியூர் ஊராட்சி, பெரிய தோட்டம் பகுதியில் புதிய சாலை அமைக்கப்பட்டுள் ளது. முன்னதாக, இப்பகுதியில் நியாய விலை கடை வீதி, பேருந்து நிறுத்தம் மற்றும் பெருமாள் கோயில் ஆகிய முக்கிய வீதிகள் வழியாக செல்லும் சாலையை ஆக்கிரமித்து தனி நபர் ஒருவர் கட்டிடங்கள் கட்டியிருந்தர். இதனால் சாலை அமைக்கும் பணிக்கு இடையூறு ஏற்பட்டது. இதுகுறித்து அப் பகுதி மக்கள் வருவாய்த்துறையினரிடம் தொடர் புகார் அளித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, வருவாய்த்துறை யினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிர மிப்பை உறுதி செய்தனர். பின்னர், காவல் துறை பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அள வீடு செய்யப்பட்டு இடித்து அகற்றப்பட்டன. எனினும், ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பகுதிகளில் மீண்டும் தகரங்களை வைத்து அந்த தனியார் நபர் தடுப்புகள் ஏற்படுத்தி சாலை அமைக்கும் பணிக்கு இடையூறு விளைவித்தனர். இதுகுறித்து கணியூர் பகுதி பொதுமக்கள் கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சாலை அமைக்கும் பணிக்கு இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், சூலூர் வட்டாட்சியர் சரண்யா உடனடியாக தலையிட்டு, அப்பகுதி யில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை துரிதப்படுத்தினார். தற்போது சாலை அமைக் கும் பணி நிறைவுற்றுள்ளது. பல மாதங்களாக சாலை வசதியின்றி தவித்த அப்பகுதி மக்கள் தற்போது சாலை அமைத்திருப்பதால் மகிழ்ச்சி அடைந்துள் ளனர்.