tamilnadu

img

கோவை: விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிப்பு - விவசாயிகள் சாலை மறியல்

விளைநிலங்களில் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் எண்ணெய் குழாய் பதிப்பதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையிலும், போலீசார் பாதுகாப்புடன் இப்பணிகள் துவங்கப்பட்டதால், சூலூர் திருச்சி சாலையில்  விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 
பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் எண்ணெய் குழாய் பதிப்பு திட்டத்தால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கோவை மாவட்டம் இருகூரிலிருந்து கர்நாடக மாநிலம் தேவனஹல்லி (பெங்களூரு) வரை 270 கிலோ மீட்டர் தொலைவுக்கு பரந்து விரிந்துள்ள இந்த திட்டத்தின் கீழ், கோவையிலிருந்து திருப்பூர் மாவட்டம் முத்தூர் வரை சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவிற்கு விவசாய நிலங்கள் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கப்படவுள்ளது. இதனால், ஏராளமான விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் நிலை ஏற்படும் என விவசாயிகள் அஞ்சுகின்றனர்.
இந்நிலையில், திங்களன்று காலை மீண்டும் பைப் லைன் பதிக்கும் பணிகள் போலீசார் பாதுகாப்புடன் துவக்கப்பட்டது. இதனையடுத்து தனியார் தோட்டத்தில் கூடி ஆலோசனை மேற்கொண்ட விவசாயிகள், பின்னர் சூலூர் திருச்சி சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து 50க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.