tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

பள்ளி வாசல்களில் பக்ரீத் சிறப்பு தொழுகை

திருப்பூர், ஜூன்.7- பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திருப்பூர் மாவட்டத்தில்  சனியன்று அனைத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை  நடைபெற்றது. நாடு முழுவதும் சனியன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப் பட்டது. இறைத்தூதர் இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படு கிறது. திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், பல்லடம், உடுமலை,  தாராபுரம் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பக்ரீத்  பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அனைத்து  பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. திருப் பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள பள்ளிவாசலில் திருப்பூர் மாநகரப் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் ஆயி ரக்கணக்கானோர் ஒன்று கூடி தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகைக்கு பின் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி தங்களது  வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். இனிப்புகள் வழங்கி யும் உற்சாகமாக கொண்டாடினர். இதுபோல் திருப்பூர் நொய் யல் வீதி மாநகராட்சி  பள்ளிவாசலிலும் சிறப்பு தொழுகை  நடைபெற்றது. அதேபோல் திருப்பூர் பெரிய பள்ளிவாசல், காதர்பேட்டை பள்ளிவாசல், கோம்பை தோட்டம் பள்ளிவா சல் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் காலை பக்ரீத் பண்டிகை  சிறப்பு தொழுகை நடைபெற்றது.  அதே போல கோவையில் உள்ள உக்கடம், பூமார்க்கெட்,  ஆத்துப்பாலம், குனியமுத்தூர் உள்ளிட்ட நகரின் முக்கிய  பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. போலீ ஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போக்குவ ரத்து பாதிப்பு ஏற்படாமல் இருக்க போக்குவரத்து காவலர்க ளும் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

பாங்காக்கில் இருந்து கோவைக்கு  3.15 கிலோ கஞ்சா விதைகள் கடத்தல்

கோவை, ஜூன் 7- பாங்காக்கில் இருந்து கோவை வந்த விமானத்தில் 3.15  கிலோ கஞ்சா விதைகளை கடத்தி வந்த பெண்ணை வான்வழி  நுண்ணறிவு அதிகாரிகள் கைது செய்தனர்.  பாங்காக்கில் இருந்து சிங்கப்பூர் வழியாக கோவை வரும்  விமானத்தில் போதைப் பொருட்கள் கடத்தி வருவதாக ஒன் றிய வான்வழி நுண்ணறிவு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தக வல் கிடைத்தது. இதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு அதி காரிகள் சிங்கப்பூரில் இருந்து வந்த விமானப் பயணிகளை கண் காணித்தனர். அதில் சந்தேகத்திற்கிடமாக வந்த பெண் ஒரு வரை அதிகாரிகள் அழைத்து விசாரித்த போது முன்னுக்கு  பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த  போலீஸார் பெண்ணின் உடைமைகளை சோதனையிட்ட போது அதில் சுமார் 3.15 கிலோ கஞ்சா விதைகள் இருந்தது  தெரியவந்தது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்த அதி காரிகள் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

பெண்ணை துவக்கப்பள்ளி மூடல்: பழங்குடியின மாணவர்களின் கல்விக்கு ஆபத்து: சிபிஎம் கவலை

உதகை, ஜூன் 7- கூடலூர் அருகே உள்ள பெண்ணை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி திடீரென மூடப்பட்டதால், அப்பகுதி பழங்குடியின மக் களின் குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெலாக்கோட்டை ஏரியா கமிட்டி செயலாளர் எம்.ஜோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி மாவட்டம், கூடலூர்  அருகே உள்ள பெண்ணை ஊராட்சி ஒன்றிய  துவக்கப்பள்ளி திடீரென மூடப்பட்டிருப்பது கவலை அளிக்கிறது. இப்பள்ளியை உடனடி யாக மீண்டும் திறந்து மாணவர்களின் கல் வியை உறுதி செய்ய வேண்டும் என மாவட்ட  ஆட்சியரை வலியுறுத்துகிறோம். மேலும்,  பெண்ணை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி  1996 முதல் செயல்பட்டு வந்தது. கடந்த  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெண்ணை  வனப்பகுதியிலிருந்து மக்கள் வெளியேற்றப் பட்டதைத் தொடர்ந்து, பாலாப்பள்ளி என்னும் இடத்தில் 32 மாணவர்களுடன் பள்ளி  தொடர்ந்து இயங்கி வந்தது. பழங்குடி சமூ கத்தைச் சேர்ந்த குழந்தைகள் அதிகமாகப் பயின்று வந்த இப்பள்ளி, அவர்களுக்கு கல் விக்கான ஒரு முக்கிய மையமாகத் திகழ்ந் தது. தற்போதைய நிலை: தற்போது, 2025 - 2026 கல்வியாண்டின் தொடக்கத்தில், பள்ளியில் பயின்ற குழந்தை கள் அருகிலுள்ள வேறு பள்ளிகளுக்கு ரகசிய மாக மாற்றப்பட்டு, பள்ளி மூடப்பட்டிருப்ப தாகத் தெரிகிறது. கல்வித்துறையின் இந்த  திடீர் நடவடிக்கை, எவ்வித முன்னறிவிப்பு மின்றி மேற்கொள்ளப்பட்டதால், அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலாப்பள்ளியில் இருந்து வேறு பள்ளிக்கு  மாற்றப்பட்ட மாணவர்கள் முறையாக பள் ளிக்குச் செல்வதில் சிரமங்களை எதிர் கொள்கின்றனர். இது மாணவர்களின் கல்வி  இடைநிற்றலுக்கு வழிவகுக்கும், என மார்க் சிஸ்ட் கட்சி தனது கவலையை தெரிவிக்கி றது. தமிழக அரசு மாணவர்களின் கல்வி நல னில் அக்கறையுடன் செயல்பட்டு வரும் நிலை யில், நீலகிரி மாவட்ட கல்வித்துறையின் இந்தச் செயல்பாடு கவலையளிக்கிறது. பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் பகுதி யில் அவர்களின் குழந்தைகள் நலனுக்காக செயல்பட்டு வந்த பள்ளியை கல்வித்துறை திடீரென மூடியது அதிர்ச்சி அளிக்கிறது. எனவே, பெண்ணை பள்ளியை மீண்டும்  திறந்து, பிற பள்ளிகளில் சேர்ந்த மாணவர் களை இப்பள்ளியிலேயே தொடர்ந்து கல்வி  கற்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் உடன டியாக தலையிட்டு, பழங்குடி குழந்தைக ளின் கல்வி உரிமை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்பதே அனைவ ரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஒப்பந்தப்படி கூலி உயர்வு வழங்கக்கோரி  ஜூன் 16 முதல் 18 வரை உண்ணாவிர போராட்டம்

கோவை, ஜூன் 7- ஒப்பந்தப்படி கூலி உயர்வு வழங்காவிட் டால், ஜூன் 16 முதல் 18 ஆம் தேதி வரை அவிநா சியில் மூன்று நாள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்கக் கூட்டமைப்பின் கூட்டத்தில் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டுள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த கூலிக்கு நெசவு செய்யும் விசைத் தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் கூட்டம் சோமனூரில் உள்ள சங்க அலுவல கத்தில் சனியன்று நடைபெற்றது. சங்கத் தலைவர் ச.ஈ.பூபதி தலைமையில் நடந்த இக் கூட்டத்தில், அவிநாசி சங்கத் தலைவர் என். எம்.முத்துசாமி, புதுப்பாளையம் சங்கத்  தலைவர் வி.நடராஜ், கண்ணம்பாளையம் சங்கத் தலைவர் ஆர்.வேலுச்சாமி ஆகியோர்  முன்னிலை வகித்தனர். 2025 ஆம் ஆண்டுக் கான கூலி உயர்வு ஏழு வாரங்களாகியும் ஜவுளி உற்பத்தியாளர்களால் அமல்படுத்தப் படாதது குறித்து விவாதிக்கப்பட்டு, முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சோம னூர் பகுதி ரகங்களுக்கு 15 சதவீதமும், இதர  பகுதி ரகங்களுக்கு 10 சதவீதமும் கூலி உயர்வு  பேச்சுவார்த்தைப்படி உடனடியாக அமல்ப டுத்தப்பட வேண்டும். கடந்த ஆண்டு ஏப்ரல் 21  முதல் முன் தேதியிட்டு முழுமையாக நடைமு றைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டது. அமைச்சர், ஆட்சியர், தொழிலாளர்  நலத்துறை கோரிக்கைக்கு இணங்க வேலை  நிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், கூலி உயர்வு கோரி  வரும் ஜூன் 16 முதல் 18 ஆம் தேதி வரை அவி நாசியில் மூன்று நாள் தொடர் உண்ணாவிர தப் போராட்டம் நடத்தப்படும் என்றும் தீர்மா னிக்கப்பட்டது. விசைத்தறித் தொழிலையும், அதைச் சார்ந்த லட்சக்கணக்கான குடும்பங் களையும் பாதுகாக்க மாநில அரசும், மாவட்ட  நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப் பட்டது. கோவை, திருப்பூர் மாவட்டங்க ளைச் சேர்ந்த சங்க நிர்வாகிகள் இக்கூட்டத் தில் பங்கேற்றனர்.

வங்கதேச நாட்டினர் இருவருக்கு இரண்டாண்டு சிறை

திருப்பூர், ஜூன் 7- திருப்பூர் முத்தனம்பாளையம் பகுதியில்  கடந்த ஆண்டு மே மாதம் 18 ஆம் தேதி சந்தே கத்துக்கு இடமாக சுற்றித்திரிந்த 2 பேரை நல் லூர் போலீசார் பிடித்து விசாரித்தனர். விசார ணையில் அவர்கள் வங்கசே நாட்டை சேர்ந்த  பைசல் அகமது (28), நஷ்ருல் இஸ்லாம் (29)  என்பதும் இவர்கள் பனியன் நிறுவனத்தில் தொழிலாளர்களாக வேலை செய்து வந்ததும்  தெரியவந்தது. மேலும் அவர்களிடம் பாஸ் போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லா ததால் வழக்குப்பதிந்து கைது செய்து  சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கின் தீர்ப்பு சனியன்று அளிக்கப்பட்டது. அதில், உரிய ஆவணங்கள் இன்றி தங்கியி ருந்த  இருவருக்கும் தலா 2 ஆண்டு கடுங்கா வல் சிறை தண்டனை, தலா ரூ.10 ஆயிரம் அப ராதம் விதித்தும், சிறை தண்டனை முடிந்த தும் சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பவும் நீதிபதி ஸ்ரீதர் தீர்ப்பளித்தார்.

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து : தொழிலாளி பலி

விருதுநகர், ஜூன் 7- விருதுநகர் அருகே அரசகுடும் பன்பட்டி யில் சுப்ரீம் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி  விபத்தில் தொழிலாளி ஒருவர் பலியானார்.  விருதுநகர் அருகே  உள்ளது மெட்டுக் குண்டு-அரசகுடும்பன்பட்டி சாலை. இங்கு   சிவகாசியைச் சேர்ந்த கனகபிரபு என்பவ ருக்குச் சொந்தமான சுப்ரீம் பட்டாசு ஆலை உள்ளது. இங்குள்ள 30க்கும் மேற்பட்ட அறை களில் சுமார் 100 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். வழக்கம் போல சனிக்கிழமை காலை  தொழிலாளர்கள் அனைவரும் பட்டாசு தயா ரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.  ஒரு அறை யில் பூத்தொட்டி என்ற பட்டாசு ரகம் தயா ரிக்கும் பணியில் சில தொழிலாளிகள் ஈடுபட்டு  கொண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட உராய்வு காரணமாக வெடி விபத்து ஏற்பட் டது. இந்த விபத்தில், குல்லூர்சந்தை யைச் சேர்ந்த சங்கிலி (40) என்ற தொழிலாளி படுகா யமடைந்தார். வெடிச் சத்தம் கேட்டு பிற தொழி  லாளர்கள் ஆலையை விட்டு வெளி யேறினர்.  தகவலறிந்து விரைந்து வந்த விருதுநகர் தீய ணைப்புத்துறை வீரர்கள் தீயை பிற அறைக ளுக்கு பரவ விடாமல் தடுத்து நிறுத்தினர்.   பின்பு, ஆம்புலன்ஸ் உதவியுடன் காயம டைந்த தொழிலாளி சங்கிலியை மீட்ட சக  தொழிலாளர்கள், விருது நகர் அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  அவர், சிகிச்சை பலனின்றி மர ணம் அடைந்தார். இந்த விபத்து குறித்து சூலக் கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டறை உரிமையாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

நாமக்கல், ஜூன் 7- நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரை அடுத்த ஜேடர்பாளையம், ஆனங்கூர் காட்டு வலவு பகுதியைச் சேர்ந்தவர் சேட்டு (42).  அதேபகுதியில் வெல்டிங் பட்டறை நடத்தி  வரும் இவருக்கு மனைவி நிர்மலா, பிரீத்தி,  சன்சிகா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். இந்நி லையில், வெள்ளியன்று சேட்டு உள்ளிட் டோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப் போது நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள், சேட்டுவின் வீட்டு கதவு மீது பெட் ரோல் குண்டை வீசியுள்ளனர். அப்போது பெட்ரோல் குண்டு வெடித்ததில் அதிப யங்கர சத்தம் ஏற்பட்டு, தீ எரிந்து கொண்டி ருந்தது. இதன்பின் சேட்டு வந்து பார்த்த போது கதவுக்கு கீழே கிடந்த செருப்புகள், சேலைகள், சேர்கள் உள்ளிட்ட பொருட்கள்  தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததன. இது குறித்து சேட்டு ஜேடர்பாளையம் காவல் துறையினருக்கு தகவல் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். மேலும்,  பரமத்திவேலூர் காவல் துணை கண்காணிப் பாளர் சங்கீதா, காவல் ஆய்வாளர் இந்தி ராணி ஆகியோர் பெட்ரோல் குண்டு வீசியது  தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வரு கின்றனர்.