tamilnadu

img

உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கிடுக

உள்ளாட்சி அமைப்புகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கிடுக

ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, ஏப்.23– தேர்தல் வாக்குறுதியின்படி தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, சிஐ டியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு எண் 2D/62-இன்படி உரிய ஊதி யம் அளிக்க வேண்டும். மேலும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி  மற்றும் கிராம ஊராட்சி பணியாளர் களுக்கு வருங்கால வைப்பு நிதி (பிஎப்) மற்றும் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி (ஈஎஸ்ஐ) திட்டங்களை செயல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கோவை ஆட்சியர் அலு வலகம் அருகே உள்ள பிஎஸ் என்எல் அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சிஐடியு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை  ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் ஜெ.ராஜாக்கனி தலைமை ஏற் றார். இதில், சிஐடியு மாவட்டப் பொருளாளர் ஆர்.வேலுசாமி, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை  ஊழியர்கள் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் கே.ரத்தினகுமார், சிஐ டியு மாவட்ட உதவித் தலைவர் ஆர். ராஜன் ஆகியோர் உரையாற்றி னர். இதில் திரளான உள்ளாட்சித் துறை ஊழியர்கள் பங்கேற்றனர். நாமக்கல் இதேபோன்று, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலை வர் கண்ணன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டத் தலைவர் எம். அசோகன் துவக்கவுரையாற்றி னார். இதில் சிஐடியு மாவட்டச் செய லாளர் என்.வேலுச்சாமி, மாவட்டப் பொருளாளர் ரங்கசாமி, ஐசிடிஎஸ் மாநில துணைத்தலைவர் ஜெயக் கொடி உட்பட பலர் கலந்து கொண் டனர்.