மண்புழு உரக் குடில் பராமரிப்பின்றி வீண்!
விவசாயிகள் வேதனைமண்புழு உரக்குடில் பராமரிப்பின்றி வீணாவது, விவசாயிகளிடையே வேத னையை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பா ளையம் ஊராட்சி ஒன்றியம், சமய சங் கிலி, அக்ரஹாரம் பகுதியில் 15 ஆவது நிதிக்குழுவின் நிதியுதவியுடன் 2022 ஆம் ஆண்டு ரூ.53 ஆயிரம் செலவில் மண் புழு உரம் தயாரிக்கும் குடில் அமைக் கப்பட்டது. ஆனால், இந்த குடில் அமைக்கப்பட்டதிலிருந்து இதுவரை ஒரு கைப்பிடி மண்புழு உரம் கூட உற் பத்தி செய்யப்படவில்லை. இப்பகுதி யில் உள்ள விவசாயிகள் பலர் இயற்கை விவசாயத்திற்கு மாறி வரும் நிலையில், அரசு அமைத்த இந்த மண்புழு உரக் குடில் விவசாயிகளுக்குப் பயன்படா மல் உள்ளது. இது குறித்து சம்பந்தப் பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக் கப்படவில்லை என விவசாயிகள் குற் றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகை யில், “குடில் அமைக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேலாகியும், இது வரை ஒருமுறை கூட பயன்படுத்தப் படவில்லை. தற்போது குடில் மிகவும் சிதிலமடைந்து, மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. எனவே, உடன டியாக மண்புழு உரம் தயாரிக்கும் இடத்தை சீரமைத்து, விவசாயிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண் டும்” என்றனர்.