தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை கடந்த சில சதாப்தங்களில் தொழில் ரீதியாகவும், பொரு ளாதார ரீதியாகவும் குறிப்பிடத்தகுந்த வளர்ச்சியை அடைந்துள்ளது. முக்கியமாக, தமிழகத்தின் சிறுதொழில்களின் மையமா கவே கோவை விளங்கி வந்துள்ளது. ஜவு ளித் துறையில் துவங்கி பம்புசெட் உற்பத்தி, ஆபரண நகை உற்பத்தி மற்றும் தகவல் தொழில் நுட்பத்திலும் சிறந்து விளங்கி வருகிறது. ஆனால் இவ்வளர்ச்சி கடந்த சில மாதங்களில் பெரும் அடி வாங்கியுள்ளது என்பதனை இந்த தீபாவளிக் காலம் உணர்த்தியுள்ளது. சாதாரணமாக தீபா வளி என்றால் புதுப்பொலிவு பெறும் கோவையின் சிறுதொழில்கள் இக்காலத் தில் எதிர்பார்ப்பற்று இருப்பதை எங்கும் காண முடிகிறது. குறிப்பாக, ஆசியாவின் பம்ப் நகர மாக அழைக்கப்படும் கோவை நகரம் முழுக்க சிறியதும் பெரியதுமாக ஏராளமான பொறி யியல் நிறுவனங்களை உள்ளடக்கி யுள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் மோட்டார் கோவையில் ஒரு சிறிய பொறியியல் நிறுவனத்தால் தயாரிக் கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறாக கோவையின் பம்ப் உற்பத்தி மொத்த இந்திய சந்தையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியாவின் தேவை யில் 40 சதத்திற்கும் மேலானவை இங்கு தான் தயாரிக்கப்படுகிறது. முக்கிய பம்ப் உற்பத்தியாளர்களாக அக்வாசப் பொறியி யல், மகேந்திர பம்ப்ஸ், சுகுணா பம்ப்ஸ், ஷார்ப் இண்டஸ்ட்ரீஸ், டெக்கான் குழாய் கள், சி.ஆர்.ஐ பம்ப்ஸ், டெக்ஸ்மோ இண் டஸ்ட்ரீஸ், பிவிஜி இண்டஸ்ட்ரீஸ், ஃப்ளொவ்ஸ்வேர், கிர்லோஸ்கர் பிரதர்ஸ் & கேஎஸ்பி பம்ப்ஸ் ஆகியவை நகரத்தில் உற்பத்தியைக் கொண்டுள்ளன. இவை யும் இதுபோன்ற இன்னும் பல நிறுவனங்க ளும் பம்புசெட்டுகளை உற்பத்தி செய்வ தற்கான உதிரிபாகங்களை இங்குள்ள பல்லாயிரக்கணக்கான சிறு நிறுவனங்க ளைக் கொண்டு தயாரிக்கிறது. அவ்வாறாக உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் பல சிறு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தி பாக்கியைப் பெற முடியாம லும் மேற்கொண்டு இதனைத் தொடர போதுமான நிதி இல்லாததா லும் இக்கா லத்தில் பெறும் அவதியுற்று வருகின்ற னர்.
பாதிப்பிற்குள்ளாகும் சிறு உற்பத்தியாளர்கள்
15 வருடங்களாக உதிரிபாக உற்பத்தித் தொழிலைச் செய்துவரும் சிங்காநல்லூரைச் சேர்ந்த தனபால் என்னும் சிறு உற்பத்தியா ளர் கூறுகையில், கோவையைப் பொறுத் தவரை இத்தொழிலை நம்பி பல்லாயி ரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ள னர். தென்னிந்தியாவில் இத்தொழிலைச் செய்வதில் கோவையே சிறந்த இடமும் ஆகும். ஆனால் கடந்த சில மாதங்களா கவே இவ்வளர்ச்சி தடைபட்டு நிற்கிறது. ஏறக்குறைய ஜிஎஸ்டி அல்படுத்தப்பட்ட திலிருந்தே இது துவங்கி விட்டது எனக் கூறலாம். உதாரணத்திற்கு ஒரு மாதத்தின் 31 ஆம் தேதிக்கான தொகையினை 20 ஆம் தேதி கட்டியாக வேண்டும். அதற்கு மேல் சென்றால் அபராதத்தோடு சேர்த்துக் கட்ட வேண்டும். இவ்வளவு கரராக ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டாலும் அதற்கான ரீபண்டு 60 முதல் 90 நாட்கள் கழித்தே வழங்கப்படும்.
இதில் அதிகமாக பாதிக் கப்படுவது எங்களைப் போன்ற சிறு உற்பத்தி யாளர்களே. ஏனெனில் நாங்கள் பெருநிறுவ னங்களிடம் இதற்கான வேலைகளைச் செய்யும் போது அவர்களுக்கு ஜிஎஸ்டி கிடையாது. ஆனால் நாங்கள் செலுத் தினால் தான் வேலை கொடுப்போம் எனக் கூறும் போது 90 நாட்கள் வரை எங்களால் காத்திருக்க முடிவதில்லை. வேலைவாய்ப்பும் நிச்சயமில்லாத சூழ லுக்கு தள்ளப்படுவோம். இப்பண்டிகை காலத்தில் மிகுந்த சிர மத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம். எங்க ளுக்குக் கீழ் பணிபுரிபவர்களுக்கு போனஸ் கூட கொடுக்க முடியவில்லை.
நான் வேலை செய்து தரும் 4 நிறுவனங்களும் இப் போது வரை பழைய பாக்கியை செலுத்த வில்லை. இருப்பினும் பணி கொடுத்தால் போதும் என்ற நிலையிலேயே நாங்கள் உள்ளோம். இதுதவிர அரசு அறிவித்த ரூ.20 லட்சம் கோடிக்கான சிறு தொழிலுக் கான கடன்கள் எங்களுக்குப் பெரிதாகக் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தா லும் அதற்கான அதிகபட்ச செக்யூ ரிட்டி கேட்கிறார்கள். இதை எங்கு சென்று முறையிடுவதென்று தான் எங்களுக்கு விளங்க வில்லை என்கிறார் தனபால்.
நெருக்கும் ஜிஎஸ்டி
இதே தொழில் செய்துவரும் தங்க வேல் என்பவர் கூறுகையில், ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதிலிருந்தே இத்தொழில் பாதியளவு முடங்கி விட்டது. முக்கியமாக கோவையில் இத்தொழிலை நம்பியிருந்த கிட்டத்தட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். ஏற்கனவே ஜிஎஸ்டியால் அதிகளவு பாதிக் கப்பட்டோம். இந்நிலையில், கொரோனா வின் காரணமாக நாங்கள் நம்பியுள்ள பெரும் நிறுவனங்களுக்கு வரவேண்டிய ஆர்டர்கள் மிகவும் குறைந்துள்ளன. தற் போது இதுவும் எங்களை அதிகளவு பாதித் துள்ளது.
இத்தொழிலைப் பொறுத்தவரை ஜிஎஸ்டி அதிகபட்சமாக 5 சதம் வரை வசூலிக்கப்பட்டாலே பெரிய சிரமத்தை உண்டாக்கும். ஆனால் 12 சதவிகிதம் கட்டி வருகிறோம். இதனை அரசின் கவனத்திற்கு பலமுறை கொண்டு சென்றும் எதுவும் நடக்கவில்லை. மேலும் தற்போதைய எங்களின் இந்நிலைக்கு அரசு குறிப்பி டத்தகுந்த வேறெந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் அரசை நம்பு வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியு மில்லை என்கிறார் தங்கவேல்.
போனஸ் அல்ல..
மாதச்சம்பளமே கேள்விக்குறி… இச்சிறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் கூறுகையில், ஏற்கனவே பலபேர் வேலையின்மையின் காரணமாக சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டனர். எங்களுக்கும் தீபாவளி போனஸ் வரவேண்டும் என்பதெல்லாம் தாண்டி, மாதச்சம்பளம் முறையாகக் கிடைத்தலே போதும் என்னும் நிலையில் உள்ளோம். கோவையில் எங்களைப் போல் லட்சக்கணக்கானோர் இதனையே வாழ்வாதாரமாக நம்பியுள்ளோம். இந்நிலையில் அரசின் சரியான வழிகாட்டுதல்களையே முழுமையாக நம்பியுள்ளோம் என்கின்றனர். கோவையில் பம்புசெட் மற்றும் அதன் உதிரிபாக உற்பத்தியைச் சார்ந்து இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். வழக்கமாக பண்டிகைக் காலங்களில் தங்கள் தொழில்களை உற்சாகத்துடன் நடத்தும் இச்சிறுதொழிலாளர்கள் கடந்த ஓரிரு வருடங்களாகவே முடங்கியுள்ளனர். ஜிஎஸ்டி மட்டுமின்றி, அளிப்பதாகக் கூறிய கடன்களும் பெருமளவு கிடைக்காததால் தொடர்ந்து அவதியுறும் இத்தொழிலாளர்களை அரசு கைகழுவி விடக்கூடாது என்பதே இவர்களின் கோரிக்கையாகும்.
ச.காவியா