கோவை, மார்ச். 2- கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறித் தொழிலாளர்களுக்கு உடனடியாக கூலி உயர்வு வழங்க வேண்டுமென கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங் களில் சுமார் ரூ. 2.50 லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. அதில் 95 சத விகித விசைத்தறிகள் கூலியின் அடிப் படையில் செயல்பட்டு வருகின்றன. ஆனால், கடந்த ஆறு ஆண்டுகளாக விசைத்தறித் தொழிலாளர்களின் கூலி உயர்த்தப்படாமல் உள்ளது. இதனை கண்டித்தும், தங்களுக்கு கூலி உயர்வு வழங்கக் கோரியும் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் திங்களன்று கோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியை சந்தித்து கூலி உயர்வு தொடர்பாக நட வடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர். இதனைத்தொடர்ந்து, செய்தி யாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் தலைவர் பழனிச்சாமி கூறுகையில், கூலி உயர்வு பிரச்சனை கடந்த 6 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ளது. கூலி உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர். இந்நிலை யில், மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக் கப்பட்டு பிரச்சனையை எடுத்துக் கூறிய தில் ஒரு வாரத்திற்குள் கூலி உயர்வு பிரச் சனைக்குத் தீர்வு காணப்படும் என உறுதி அளித்துள்ளார். இதற்குள் தீர்வு காணாவிட்டால் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் விசைத்தறிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தார்.