tamilnadu

img

உடுமலை: குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் சாலை மறியல்

உடுமலை, நவ. 21- உடுமலை அருகே முறையாக குடிநீர் வழங்கக் கோரி கிராம மக் கள் காலிக்குடங்களுடன் கோவை -திண்டுக்கல் தேசிய நெடுஞ்சா லையில் புதனன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  திருப்பூர் மாவட்டம், உடும லையை அடுத்த பூலாங்கிணறு ஊராட்சியில் சுமார் 2 ஆயிரத் திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்க ளுக்கு பூலாங்கிணறு கூட்டு குடி நீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங் கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 22 நாட்களாக இப்பகுதிக்கு குடிநீர் வழங்கப்படவில்லை. இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக் கப்பட்டது. ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆவேசமடைந்து காலிக் குடங்களுடன் கோவை -திண்டுக் கல் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து தகவலறிந்து சம் பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை யில் ஈடுபட்டனர். இதைத்தொ டர்ந்து உடனே குடிநீர் வழங்கப்ப டும் என அதிகாரிகள் எழுத்துப் பூர்வமாக உறுதியளித்தனர். மேலும், கோவை, பொள்ளாச்சி, பழனி பேருந்துகள் பூலாங்கிணறு பகுதியில் நின்று செல்வது இல்லை எனவும் புகார் தெரிவித் தனர். இதனால் பள்ளி குழந்தை கள், கிராம மக்கள் கடுமையா கப்  பாதிக்கப்படுகிறார்கள். ஆகை யால் பேருந்துகள் நின்று செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தைத் தொடர்ந்து போராட்டத்தைக் கை விட்டு அனைவரும் களைந்து சென்றனர். இப்போராட்டம் கார ணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது.