கும்பகோணம், ஜூன் 20- சிபிஎம் திருவிடைமருதூரில் வடக்கு ஒன்றியக்குழு கூட்டம், ஒன்றியக் குழு உறுப்பினர் சொக்கலிங்கம் தலை மையில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சா.ஜீவபாரதி, மாவட்ட குழு உறுப்பினர் பக்கிரிசாமி, ஒன்றிய குழு உறுப்பி னர்கள் நாகேந்திரன், சேகர், சங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றி யத்திற்கு உட்பட்ட திருநாகேஸ்வரம் பேரூராட்சியில் நாகநாத சுவாமி கோயில் அருகிலேயே தென் திருப்பதி என்று புகழப் படும் உப்பிலியப்பன் கோவில் கோயிலும் உள்ளது. இக்கோயில்களுக்கு ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் மாநிலங்களில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் வருவர். ஆனால் நாகநாதசுவாமி கோவிலுக்கு எதிர்புறம் அரசு மதுபானக் கடை உள்ளது. இக்கடையினால் பொதுமக்க ளுக்கு குடி பிரியர்களால் தொந்தரவாக உள்ளது. கோயில் அருகே மது குடித்து விட்டு தேவையில்லாத சண்டைகள் அநாகரிகமாக பேச்சுக்களால் மதுப் பிரியர்கள் தொடர்ந்து இடையூறாக இருந்து வருகிறார்கள். இந்த மதுபானக் கடை யினால் எந்த நேரமும் போக்குவரத்து நெருக்கடியாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் மிகவும் சிர மப்பட்டு வருகிறார்கள். ஆகவே பொதுமக்களுக்கு இடையூ றாக உள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயில் எதி ரில் உள்ள மதுபானக் கடையை அகற்ற வேண்டும். இது குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே பொது மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை போர்க்கால அடிப்படையில் அகற்றிட வேண்டும். நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மக்களை திரட்டி பல்வேறு போராட்டங் கள் நடைபெறும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. இத்தீர்மானம் மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.