tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கருத்தரங்கம்

சேலம், பிப். 24- குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தோழி கூட்டமைப்பு சார்பில் தாரமங்கலத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு மாதர் சங்க மாவட்ட செயலாளர்   ஐ.ஞானசௌந்தரி தலைமை வகித்தார். தோழி கூட்டமைப்பு ஒருங் கிணைப்பாளர் வீ.அலமேலு வரவேற்புரை யாற்றினார். எம். கவிதா முன்னிலை வகித் தார்.  இதில் மக்கள் ஒற்றுமை மேடை செய லாளர் எம்.குணசேகரன், மாதர் சங்க மாவட்ட பொருளாளர் என்.ஜெயலட்சுமி, துணைத்தலைவர் கே.ராஜாத்தி, நிர்வாகி கள் ஜி.கவிதா, எம்.கார்த்திகா, எஸ்.காவேரி, பாக்கியம், தானம்மாள், ஜோஸி, ஆதித்தமிழர் பேரவை நிர்வாகிகள் ராதா கிருஷ்னன், மாதேஷ் உள்ளிட்ட ஏராளமா னோர் பங்கேற்றனர்.