tamilnadu

img

யாகம் நடத்தினால் மழை வரும்! -அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆருடம்

கோவை, ஜூன் 22- யாகம் நடத்தினால் கண்டிப் பாக மழை வரும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர் களிடம் தெரிவித்தார்.  சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்தாண்டு கடுமை யான குடிநீர் பற்றாக்குறை ஏற் பட்டு பொதுமக்கள் கடும் அவதிப் பட்டு வருகின்றனர். இந்த நிலை யில், தமிழகத்தில் மழை வேண்டி அனைத்துஅமைச்சர்களும் அந்தந்த மாவட்டங்களில்  யாகம் வளர்க்க அண்ணா திராவிட முன்னேற்ற கழக  தலைமை உத்தரவிட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக, கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் கோவை புறநகர் மாவட்ட கழகம் சார்பில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் மழை பெய்ய வேண்டி 40 வகையான தானியங்கள் வைத்து யாகம் நடைபெற்றது. இந்த யாகத் தில் புறநகர் மாவட்டத்தை சேர்ந்த  அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனையடுத்து,  செய்தியாளர்களி டம் பேசிய அமைச்சர் வேலுமணி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர் களின் வழியில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் தலைமை யிலான அரசு பல விதமான திட்டங் களை செயல்படுத்தி வருகிறது. இந்த ஆண்டுமழை இல்லாத சூழலில் நிலத் தடி நீர் குறைந்து தண்ணீர் பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது. மழை பெய்ய வேண்டி சனியன்று அனைத்து மாவட்டங்களிலும் கோயில்களில் வருணா யாகம் நடத்தப்பட்டுள்ளது. யாகம் நடத்தியதால் கண்டிப்பாக மழை பெய்து மக்கள்  பயனடைவார் கள்.  ஜோலார்பேட்டையிலிருந்து அங் குள்ள மக்களுக்கு தண்ணீர் பிரச்சனை ஏற்படாத வகையில், சென்னை வாழ் மக்களுக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படும். ஜோலார்பேட்டையில் தண்ணீர் போதுமான அளவிற்கு இருக் கிறது. அதிகாரிகளின் ஆய்வின் அடிப் படையிலே அங்கிருந்து சென்னைக்கு நீர் கொண்டு செல்ல ஏற்பாடு செய் யப்பட்டு உள்ளது.  காவிரியில் இருந்து தண்ணீர் பெறும் விவகாரத்தில் தான் எதிர்ப்பு உள்ளது. தண்ணீர் பிரச் சனை தொடர்பாக எதிர்கட்சி விமர் சனங்கள் குறித்து குற்றம் சொல்ல விரும்பவில்லை என்றார்.பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு புதிய திட் டங்கள் மூலம் தண்ணீர் பிரச்சனையை தீர்க்க முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.