கோவை, அக்.13- பொங்கல் பண்டிகையின்போது அரசு சார்பில் பொது மக்களுக்கு புதுப்பானை, அடுப்புகள் வழங்கிட வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள் ளனர். தமிழகம் முழுவதும் 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, கோவை மாவட்டத்தில் கவுண்டம்பாளையம், சிங்காநல் லூர், வடவள்ளி, கணபதி, வெள்ளலூர் உள்ளிட்ட பகுதிக ளில் குலாலர் சமூகத்தினர் மண்பாண்ட தொழிலில் செய்து வருகின்றனர். ஒரு லட்சம் பேர் இருக்கக்கூடிய இந்த சமூகத் தினரின் வாழ்வாதாரம் இத்தொழிலை நம்பியே உள்ளது. ஆகவே, பொங்கல் பண்டிகையின்போது தமிழக அரசு சார் பில் பொதுமக்களுக்கு இலவசமாக புதுப்பானை, அடுப்பு கள் வழங்கிட வேண்டும் எனக்கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்பாண்ட தொழிலாளர்கள் மனு அளித்தனர்.