tamilnadu

img

காலமுறை ஊதியம் வழங்கிடுக

தாராபுரம், ஆக. 25 - நீதிமன்ற உத்தரவுப்படி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என செவிலியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத் தின் திருப்பூர் மாவட்ட பொதுக்குழு கூட்டம் தாராபுரம் அரசு ஊழியர் சங்க கட்டித்தில் மாவட்ட துணை தலைவர் விமலா தேவி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பெஜாக்சின் எதிர்கால சங்க நடவடிக்கைகள் குறித்து பேசி னார். கூட்டத்தில் செவிலியர்களுக்கான சீருடையில் இருக் கும் பாகுபாடுகளைக் களைந்து, அனைத்து செவிலியர்க ளுக்கும் ஒரேமாதிரியான சீருடை வழங்கிட வேண்டும். ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்கிடவேண் டும். யுனிவர்சல் ஹெல்த் கவரேஜ் பணிக்கு மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி டிப்ளமோ அல்லது நர்சிங் பட்டம் பெற்ற செவிலியர்களை பணியமர்த்த வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் மாவட்ட தலைவர் கஸ்தூரி, பொருளாளர் அட்லின், அரசு ஊழியர் சங்க வட்டக்கிளை தலைவர் ராஜி, செயலாளர் ஈஸ்வரமுர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.