நாமக்கல், நவ.26- நாமக்கல் மாவட்ட அட்சியர் க.மெக ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையத்தில் வருகின்ற நவ.29 ஆம் தேதி யன்று (வெள்ளிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. எனவே, தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான நபர்களை அவர் களது நிர்வாகிகளைக் கொண்டோ அல்லது நேரில் வந்தோ தேர்வு செய்து கொள்ளலாம். இம்முகாமானது முற்றி லும் இலவசமானது. மேலும், இவ்வேலை வாய்ப்பு முகாமின் மூலம் பணிவாய்ப்பு பெற்றவரது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு ரத்து செய்யப்படமாட்டாது. ஆகவே, மேற்படி பணிகளுக்கு தகுதி யும், விருப்பமும் உள்ள நபர்கள் அனைவ ரும் வருகின்ற நவ.29 ஆம் தேதியன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற் றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ள தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு அந்த அறிக்கையில் தெரிவித் துள்ளார்.