உடுமலை, பிப். 4- உடுமலைப்பேட்டை திருவள் ளுவர் திருக்கோட்டத்தின் சார்பில் செவ்வாயன்று உடுமலைப் பேட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளிக்கு திருவள்ளுவர் சிலையை வருவாய் கோட்டாட்சி யர் ரவிக்குமார் வழங்கினார். கடந்த ஜன.18ஆம் தேதியன்று திருவள்ளுவர் திருவிழா, மற்றும் பத்து மற்றும் பனிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ்மொழிப் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவருக்கு நினைவுப்பரிசு வழங் குதல் மற்றும் அரசுப்பள்ளிகளுக்கு திருவள்ளுவர் சிலை வழங்குதல் எனும் முப்பெரும் விழா நடைபெற் றது. இதில் சிறப்பு வாய்ந்த நான்கு பள்ளிகளைத் தேர்ந்தெடுத்த அந் தப் பள்ளிகளுக்கு மட்டும் திருவள்ளு வர் சிலை வழங்கப்பட்டது. திரு வள்ளுவர் திருக்கோட்டத்தினர் ஒவ்வொரு ஆண்டும் இதை வழங்கி வருகின்றனர். இந்த 2020 ஆம் ஆண் டும் உடுமலைப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேவனூர் புதூர் பெண்கள் மேல் நிலைப்பள்ளி, கல்லாபுரம் அரசு ஆரம்பப்பள்ளி, கொழுமம் குப்பம் பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய நான்கு பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டது. இதன் ஒரு பகுதியாக உடுமலை அரசு ஆண் கள் மேல்நிலைப்பள்ளிக்கு திருவள்ளுவர் சிலையை வரு வாய் கோட்டாட்சியர் ரவிக்குமார் தலைமையாசிரியர் ராஜசேகரனி டம் வழங்கினார். இதில், திருவள்ளுவர் திருக் கோட்ட அறக்கட்டளையின் துணைத்தலைவர்கள் வி.கே.செல்வராஜ், அருட்செல்வன் ஆகி யோர் உடனிருந்தனர்.