உடுமலை, ஆக. 27- இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி செவ்வாயன்று உடுமலை வட் டாட்சியர் அலுவலகத்தில் சிபிஎம் சார் பில் மனு அளிக்கப்பட்டது. குடிமங்கலம் ஒன்றியம், சோம வாரப்பட்டி ஊராட்சி, பெதப்பம்பட்டி பகுதியில் உள்ள அம்பேத்கார் நகரில் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்களுக்கு இப்பகுதியில் உள்ள அரசு நிலத்தில் இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது. இது குறித்து பொது மக்கள் கூறும் போது, நாங்கள் கடந்த முப்பது ஆண்டு களுக்கும் மேலாக அம்பேத்கார் நக ரில் வசித்து வருகிறோம். தற்போது எங்கள் குடுபத்தில் பத்துக்கும் மேற் பட்டவர்கள் ஒரே குடும்பத்தில் எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லா மல் மிகவும் சிரமமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறோம். எனவே எங்க ளுக்கு அரசு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று குடி மங்கலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் வட்டாட் சியரிடம் மனு கொடுத்துள்ளோம் என் றனர். முன்னதாக, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உடுமலை தலைமை அலுவலகத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் ஊர்வலமாக வட் டாட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். இதில் மாவட்டக்குழு உறுப்பினர் வெ. ரங்கநாதன், ஒன்றிய செயலாளர் சசிகலா மற்றும் ராஜகோபால் உள் ளிட்ட திரளான உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.