tamilnadu

img

கோவையில் வடமாநில இளைஞர் மர்ம மரணம்: நிதி கேட்டு சிஐடியு போராட்டம்

கோவை, ஜூலை 15– கோவை தனியார் நிறுவனத் தில் பணியாற்றிய வடமாநில இளைஞரின் மரணத்தில் சந்தே கம் இருப்பதாக குற்றம்சாட்டி சிஐடியுவினர் முற்றுகை போராட் டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற் பட்டது.  கோவை, கேஎன்ஜி புதூர் பிரி வில் போஸ்வால் என்கிற தனியார் மார்பில்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பணி யாற்றி வருகின்றனர். இந்நிறு வனத்தின் மார்பில் கூடோன் வட கோவையில் உள்ளது. இங்கு பணி யாற்றி வந்த பீகாரைச் சேர்ந்த இளைஞர் கடந்த 28.4.2019 அன்று மர்மமான முறையில் இறந் தார். உணவு ஒவ்வாமையால் இறந்தார் என நிர்வாகத்தின் சார் பில் குடும்பத்திற்குத் தகவல் சொல் லப்பட்டது. ஆனால் நல்ல நிலை யில் இருந்தவர் திடீர் என இறந் துள்ளார்.  இவர் மரணத்தில் சந்தே கம் இருப்பதாகக் குடும்பத்தார் கருதினர். இதுகுறித்து விசாரிக் கவும், உரிய நீதி வேண்டும் எனக் கேட்டு சிஐடியு மாவட்ட செயலா ளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, வடக்கு பொது தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் கேசவமணி, சிபிஎம் பெரியநாயக்கன்பாளையம் ஒன் றியக்குழு உறுப்பினர் மோகன் ராஜ் மற்றும் சிஐடியு கட்டுமான சங்கத்தின் செயலாளர் முருகன் உள்ளிட்டோர் மரணமடைந்த உற வினர்களோடு போஸ்வால் நிறுவ னத்திற்குச் சென்றனர். இவர் களை அனுமதிக்க மறுத்த நிலை யில், நிறுவனத்தின் வாயிலில் அமர்ந்து இளைஞரின் மரணத் திற்கு நீதி கேட்டு முழக்கங்களை எழுப்பினர்.  இதனையடுத்து சம் பந்தப்பட்ட போஸ்வால் மார்பில் நிறுவனம் சிஐடியு நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். இதுகுறித்து சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், இறந்த இளைஞரின் மரணத்தில் உள்ள மர்மம் குறித்து காவல்துறையினர் விசாரிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட குடும் பத்திற்கு உரிய இழப்பீட்டை நிறு வனம் வழங்க வேண்டும். மூன்று மாதங்களுக்குப் பிறகு தற்போது நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதியை பெற்றுத்தரும்வரையில் மார்க்சிஸ்ட் கட்சியும், சிஐடியும் போராடும் என்றார்.