tamilnadu

img

புதிதாக அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானம்

அமைச்சர் திறந்து வைப்பு

கோபி, ஜன.14- கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம் பாளையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட விளை யாட்டு மைதானத்தை அம்மா இளைஞர்விளை யாட்டு திட்டத்தின் மூலம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத்தார்.  ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் திறந்து வைத் தார். இதனைதொடர்ந்து பேசிய அமைச்சர் கே.ஏ செங்கோட்டையன், ஒவ்வொரு ஊராட்சியிலும் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் செயல்படுத் தப்பட்டு வருகிறது. இத்திட்டமானது இளைஞர்க ளின் உடல் நலத்தை பாதுகாக்கவே செயல்படுத்தப் பட்டு வருகிறது. முன்பெல்லாம் கபாடி விளையாட்டு மட்டுமே முக்கிய விளையாட்டாக கிராமங்களில் விளையாடி வந்த நிலையில் தற்போது கிரிக்கெட் மாறியுள்ளதாக தெரிவித்தார்.  மேலும் இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவ லர் கவிதா ,கோட்டாட்சியர் ஜெயராமன், உள் ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகி கள் உட்படபலர் கலந்து கொண்டனர்.

;