tamilnadu

கோவையில் மேலும் ஒரு காவல் நிலையம் மூடல்

கோவை, ஜூலை 20- கோவை தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் பணி யாற்றிய காவலர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து காவல் நிலையம் மூடப்பட்டது. கோவையில் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தொண்டா முத்தூர் பகுதியில் காவல் நிலையத்தில் பணியாற்றும் அனைத்து காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து இருவ ரும் சிகிச்சைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டனர். இதன்பின் காவல் நிலையம் மூடப்பட்டு, அப் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் மைதானத்திற்கு தற் காலிகமாக மாற்றப்பட்டது.  மேலும், தொற்று உறுதி செய்யப்பட்ட காவலர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் தகவல்களை சேகரிக்கும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கோவை யில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சூலூர், போத்தனூர், துடியலூர், மதுக்கரை, உக்கடம் ஆகிய காவல் நிலையங்கள் மூடப்பட்ட நிலையில் தற்போது ஆறா வதாக தொண்டாமுத்தூர் காவல் நிலையம் மூடப்பட்டுள் ளது கோவை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி யுள்ளது.