கோவை, செப்.23- அத்துமீறி நடந்து கொள்ளும் நுண் நிதி நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாதர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடு பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா பொதுமுடக்கம் கார ணமாக வங்கி மற்றும் நுண் நிதி நிறு வனங்களில் பெற்ற கடன் தவணையை செலுத்த மத்திய, மாநில அரசுகள் கால அவகாசம் வழங்கி உத்தரவிட் டுள்ளது. ஆனால், இந்த உத்தரவிற்கு மாறாக நுண் நிறுவன ஊழியர்கள் வாங்கிய கடனை கட்டச்சொல்லி மக ளிர் சுய உதவிக்குழுவினரை ஆபாச மாக பேசியும், மிரட்டியும் வசூல் செய்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பல முறை முறையிட்டும் எவ்வித நடவ டிக்கையும் எடுக்கப்படாத நிலையில் புதனன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் முற் றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர்.
இவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்திய நிலையில், ஆவேச ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணாவில் ஈடு பட்டனர். இதையடுத்து நான்கு வட் டாட்சியர்கள் தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண்பது என வும், அத்துமீறும் நுண்நிதி நிறுவனங் களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட வருவாய் அலுவலர் உறுதியளித்தார். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். முன்னதாக, இப்போராட்டத்தில் மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.ராதிகா, மாவட்ட பொருளாளர் ஜோதிமணி, மாநிலக்குழு உறுப்பி னர்கள் ராஜலட்சுமி, சுதா மற்றும் விஜயலட்சுமி உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்ட னர்.