tamilnadu

img

மேட்டுப்பாளையம் சாதி ஆணவக்கொலை பயங்கரம் கொலையாளியை குண்டர் சட்டத்தில் அடைக்க வலியுறுத்தல்

கோயம்புத்தூர், ஜூன் 26-  மேட்டுப்பாளையத்தில் நடந்த சாதி ஆணவ கொலை சம்பவத்திற்கு காரணமான கொலை யாளியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என சமூக செயற் பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பா ளையத்தில் கனகராஜ் என்பவர் வர்ஷினி பிரியா என்ற பெண்ணை காத லித்து வந்துள்ளார். தலித் சமூகத்தைச் சேர்ந்த வர்ஷினி பிரியாவை காத லிப்பதற்கு கனகராஜின் அண்ணன் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில் செவ்வாயன்று மாலை கனகராஜ் மற்றும் அவருடன் இருந்த வர்ஷினி பிரியாவை, கனகராஜின் அண்ணன் வினோத் அரிவாளால் சராமாரியாக வெட்டியுள்ளார். இதில் கழுத்து, கை மற்றும் தலைப்பகுதியில் பலத்த வெட்டுப்பட்ட கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  இதேபோல், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வர்ஷினி பிரியாவை மீட்ட அக்கம் பக்கத்தினர் கோவை அரசு மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர். அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வர்ஷினி பிரியாவுக்கு தலை உள்பட அதிக காயங்கள் ஏற்பட்டு உள்ளதால், உயிருக்கு ஆபத்தான சூழலில் இருப்பதாக மருத்துவர்கள் தெரி வித்துள்ளனர். இந்த நிலையில், இத்தகைய சாதி ஆணவக் கொலை பாதகச் செயல் களைத் தடுக்க வேண்டும்; இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நட வடிக்கை எடுக்க வேண்டும்; ஆணவக்  கொலைக்கு எதிராக சட்டம் இயற்ற  வேண்டும்; பாதிக்கப்பட்ட குடும்பத் தினருக்கு அரசு உரிய இழப்பீடு தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புத னன்று கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் அனைத்துக் கட்சியினர் மற்றும் அமைப்பினர் ஒன்று கூடினர். இதன்பின் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியர் கு.ராசமணியிடம் மனு அளித்தனர்.

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா, சமூக செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு  முன்னணியின் மாநில துணை பொதுச் செயலாளர் யு.கே.சிவஞானம், மாவட்ட  தலைவர் வழக்கறிஞர் ஆறுச்சாமி, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலா ளர் கே.ரத்தினகுமார், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சுசி.கலை யரசன், திராவிட தமிழர் கட்சியின்  தலைவர் வெண்மணி, ஒடுக்கப் பட்டோர் விடுதலை இயக்கத்தின் அஷ்ரப்அலி,  தமிழ் புலிகள் இள வேனில் உள்ளிட்ட பல்வேறு அமைப் பின் நிர்வாகிகள் கூட்டாக மனு அளித்தனர்.  பின்னர் அவர்கள் கூறுகையில், “தமிழகத்தில் ஆணவ கொலை எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், தமிழக அரசு  இதை ஒப்புக்கொள்வதே இல்லை.  தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 185 ஆணவக் கொலைகள் நடந்துள்ளன.  மேற்கு மண்டலத்தில் சாதிய கொலைகள் அதிகரித்துள்ளன. அதே போல, ஆணவ சித்ரவதைகளும், தாக்குதல்களும் நடந்து வருகின்றன. எனவே, ஆணவ கொலைகள் மற்றும் தாக்குதல்களை தடுக்க தனி காவல் பிரிவு அமைக்க வேண்டும். வர்ஷினி பிரியாவின் குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் நிதி உதவியும், அரசு வேலையும் வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட கொலையாளியை குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டும். ஆணவக் கொலைகளை தடுக்கும் முயற்சியில் அரசு நிர்வாகம் ஈடுபட வேண்டும்” என்றனர்.

கொலையாளி சரண்
இதனிடையே, தம்பியை கொலை  செய்த வினோத்குமார் மேட்டுப்பாளை யம் காவல்நிலையத்தில் புதனன்று காலை சரணடைந்தார். இவரை கைது செய்த காவல்துறையினர் வினோத்குமார் மீது கொலை வழக்கு, வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு உட்பட நான்கு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.