கோவை, ஜூலை 11- ஜல்லிக்கட்டுக்காக போராடிய தைப்போல கோவையில் சூயஸ் நிறு வனத்திடமிருந்து தண்ணீரை பாது காக்க விரைவில் போராட்டம் நடது தப்படும் என இயக்குநர் கவுதமன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது அவர் மேலும் கூறியதா வது :- தனி ஒரு மனிதனுக்கு உணவு இல்லையெனில் ஜகத்தினை அழித்தி டுவோம் என கூறியவர் பாரதி. தஷ் ணீர் இல்லை என்றால் என்ன செ வது. வலுக்கட்டாயமாக வழிந்து எங் கள் நகரமான கோவையை திட்ட மிட்டு தண்ணீர் இல்லா நகரமாக மாற்றி, குடிப்பதற்கும், குழிப்பதற்கும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் நிறுவனத்திடம் கேட்கும் வகையில் ரூ.3,500 கோடி மாநகராட்சி ஒப்பந் தம் செய்யப்பட்டுள்ளது.
யாரை நம்பி ஓட்டுப்போட்டு கோட்டைக்கு அனுப் பினோமே, அவர்கள் கையூட்டுல் பெற்று வசதியாக வாழ நம்மை கையேந்தும் நிலையை ஏற்படுத்தி உள்ளனர். இது ஏற்றுக்கொள்ள முடி யாதது, சகித்துக்கொள்ள முடியாதது. மதுவை நீங்கள் கொடுப்பீர்கள், தண்ணீரை தனியார் தர வேண்டுமா..?, பற்றாக்குறையை உருவாக்கி எதிர் காலத்தில் தண்ணீரில் கொள்ளை அடிக்கும் திட்டத்தைக் கொண்டு வரு வது நியாயமற்றது. உள்ளாட்சி அமைச்சரும், தமிழக முதலமைச் சரும் உடனடியாக 60 வார்டுகளில் நடைபெறும் இந்த திட்டத்தை நிறுத்தி, இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வில்லை என்றால், போராட்டம் நடத் தப்படும். கொள்ளை அடிக்கும் கும்ப லால் இந்த கொள்ளை அடிக்கும் திட் டம், ஒப்பந்தம் காணப்பட்டுள்ளது. இந்த ஏமாற்றுத் திட்டம் தேவை யில்லை. சூயஸ் நிறுவனம் சென்ற இடமெல்லாம் கொடூரமாக நடந்து கொண்டிருந்த வரலாறுகள் உள்ளது. ஆகவே, ஜல்லிக்கட்டிற்காக அவனி யாபுரம் போய் நின்றதுபோல், கோவையில் நின்று தண்ணீர் யுத்தம் செய்வோம். இவ்வாறு அவர் கூறி னார்.