தருமபுரி, ஆக.9- ஸ்ரீ நகருக்கு சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் து.ராஜா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதை கண்டித்து வெள்ளியன்று கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு சலுகை களை மத்திய அரசு ரத்து செய்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து அறிவித்தது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆயிரக் கணக்கில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, முக்கிய அரசில் கட்சி தலைவர்கள் மற்றும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் ஜம்மு- காஷ்மீர் மாநில செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரு மான முகமது யூசுப் தாரிகாமி உள்ளிட்ட தலைவர்கள் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த தலைவர்களை காண சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் து.ராஜாவும் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். இதனை கண்டித்து தருமபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத் திற்கு, நல்லம்பள்ளி ஒன்றியச் செய லாளர் கே.குப்புசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, எஸ்.கிரைஸாமேரி, சோ.அர்ஜுன், வே.விசுவநாதன், தருமபுரி நகரச் செயலாளர் ஆர்.ஜோதிபாசு, ஒன்றியச் செயலாளர் என்.கந்த சாமி, பாப்பாரப்பட்டி பகுதிச் செய லாளர் ஆர்.சின்னசாமி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.பூபதி, வழக்கறிஞர் டி.மாதையன்,ஏ.ஜெயா உள்ளிட்டோர் கலந்து கொண்டு முழக்கங்கள் எழுப்பினர்.
பென்னாகரம்
இதேபோல், பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இந்த ஆர்ப் பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் முருகேசன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட குழு உறுப்பினர்கள் வி.ரவி, எம்.சிவா, பென்னாகரம் நகர செயலாளர் எஸ்.வெள்ளியங்கிரி, நகரக் குழு உறுப்பினர்கள் தனபால், ராஜி, சிவன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.
சேலம்
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இடதுசாரி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டத்திற்கு காவல் துறையினர் அனுமதி அளிக்காத நிலையில், தடையை மீறி நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சேலம் மாவட்ட மார்க் சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் பி.இராமமூர்த்தி, சிபிஐ மாவட்டச் செயலாளர் ஏ.மோகன் ஆகியோர் தலைமை தாங்கினர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.வெங்கடபதி, எம்.சேது மாதவன், ஆர்.குழந்தைவேல், எம்.குணசேகரன், மாநகர மேற்கு செயலாளர் எம்.கனகராஜ், மாநகர வடக்கு செயலாளர் எம்.முருகேசன், சேலம் தாலுகா செய லாளர் ஏ.சுந்தரம், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.சந்திரன், அ.ஐ.ஞானசௌந்தரி, டி.பர மேஸ்வரி, என்.பிரவீன்குமார் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.விமலன், ஆர்.ரமேஷ், பி.சங்கீதா, சிபிஐ (எம்.எல்) கோ. மோகனசுந்தரம் உள்ளிட்ட நூற் றுக்கு மேற்பட்டவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல்
இதேபோல், நாமக்கல் பூங்கா சாலை முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி யின் மாவட்ட செயலாளர் எஸ்.கந்த சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ந.வேலுசாமி, கே.தங்க மணி, பி.ஜெயமணி, மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.ராமசாமி, சி. துரைசாமி, பி.செல்வராஜ் உள் ளிட்ட திரளானோர் கலந்து கொண் டனர். இதேபோல் நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டம் எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் இடதுசாரி கட்சி களின் சார்பில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் கே.எஸ். வெங்கடாசலம் தலைமை வகித் தார். கண்டன ஆர்ப்பாட்டத்தை ஒன்றிய செயலாளர் சு.சுரேஷ் துவக்கி வைத்தார். சிபிஐ ஒன்றிய செயலாளர் க.அன்புமணி, ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.ரமேஷ், வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் ஆர்.சக்திவேல், சிபிஐ ஒன்றியக் குழு உறுப்பினர் பி.மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண் டனர். நிறைவாக, கிளை செய லாளர் தேவராஜ் நன்றியுரையாற் றினார்.