கோவை, ஆக. 1- தேசிய வேளாண் உயர் கல்வி திட்டத்தின் கீழ் தமிழ் நாடு வேளாண் பல்கலைக்கழக கல்லூரிகளில் கல்வி தரத் தினை மேம்படுத்த நிறுவன வளர்ச்சி திட்டத்தின் கீழ் 30 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் அங்கீகாரம் இல்லாததால், கடந்த காலங்களில் இந்த நிதியுதவிக்கான போட்டியில் பங்கு பெற இயலவில்லை. ஆதலால், தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம் கர்னால் மற்றும் ஏழு மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள் இத்திட்டத்தின் மூலம் முதலாமாண்டில் நிதியுதவி பெற்றன. இதனையடுத்து கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்ததன் விளைவாக, இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் தில்லியின் அங்கீகாரம் இந்த ஆண்டு கிடைக்கப்பெற்றது. இதன் காரணமாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தேசிய அளவில் 64 மாநில வேளாண் பல்கலைக்கழகங்களுக்கிடையே போட்டியிட்டு, நிறுவன வளர்ச்சித் திட்ட நிதியாக ரூ.30 கோடி பெற்றுள் ளது. மேலும், ஐந்து மாநில வேளாண் பல்கலைக்கழகங் களும் இந்த நிதியுதவியைப் பெற்றுள்ளன. அதில், தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் முதலிடம் பெற் றது. இந்த திட்டமானது தமிழ்நாடு வேளாண்மைப் பல் கலைக்கழகத்தின் 9 உறுப்பு கல்லூரிகளில் நடைபெறும் ஆறு இளங்கலைப் பட்டப்படிப்பு மேம்பாட்டிற்கு செயல் படுத்தப்படும். இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக, மாண வர்களுக்கு சிறந்த கற்கும் சூழ்நிலையைப் புதுமையான முறையிலும், கல்வி சீர்திருத்தங்கள், ஆசிரியர் மாணவர் களுக்கிடையே பன்முகத்தன்மையை அதிகரிக்கவும், திறன் மேம்பாடு, தொழில்முனைவோர்க்கான திறனை வளர்த்தல், கல்வி மேலாண்மையை அதிகரிக்கும் நோக் கில் முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்தல் போன் றவை செயல்படுத்தப்படும் என பல்கலைக் கழக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.