tamilnadu

வேளாண் துறையில் காலிப்பணியிடம் நிரப்ப அழைப்பு

கோவை, ஜூலை 7- வேளாண்மை துறையில் காலி பணி யிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதுகுறித்து, கோவை மாவட்ட  ஆட்சி யர் கு.ராஜாமணி வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது, வேளாண்மை துறையில் கணினி புள்ளி விவர பதிவாளர்கள் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணி நியமன முகமை மூலம் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இப் பணியை மேற்கொள்ள பணி முகமைகள் தங்களது விவரங்கள் மற்றும் அனுப வங்களை நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ வேளாண்மை இணை  இயக்குநர் அலுவலகத்தில் வரும் 12ம் தேதி மாலை 5 மணிக்குள் தெரிவிக்க லாம் என அறிக்கையில் கூறியுள்ளார்.